Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெடித்தது மோதல்.. பாஜக வேலையை காட்டிட்டாங்க.. வெளிப்படையாக உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் எடப்பாடிக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Maruthu azhaguraj targets BJP after Chennai hight court verdict goes in favour of Edappadi Palanimsay

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குத் தடைவிதிக்க, நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்: இதற்கிடையே தனியார் செய்தி சேனலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இது வழக்கமான ஒரு தீர்ப்பு.. வாடிக்கையான மற்றும் வேடிக்கையான ஒரு தீர்ப்பு தான்.. இதை நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான்.. எந்தவொரு கட்சியையும் நீதிமன்றம் வழிநடத்த முடியாது.. கட்சியின் தலைவரை நீதிமன்ற உத்தரவுகள் முடிவு செய்ய முடியாது. நாங்கள் அடுத்து மக்கள் மன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.

ஒரு கட்சியை நடத்தச் சட்ட விதிகளைக் காட்டிலும் நிதி தான் முக்கியம் என்றே இப்போது மக்கள் புகார் சொல்கிறார்கள்.. இந்த தீர்ப்பில் எங்களுக்குப் பின்னடைவு இல்லை. எப்போது எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக ஒரு பின்னடைவு ஏற்படுகிறதோ.. அப்போதெல்லாம் அவரை கைதூக்கிவிடும் வகையில் ஒரு நீதிமன்ற தீர்ப்பும் வந்துவிடுகிறது. கடந்த காலங்களில் பல முறை இதுபோல நடந்துள்ளது.

கடும் தாக்கு: மதுரையில் இவர்கள் நடத்தியதை மாநாடு என்கிறார்கள். அது ஒரு புளியோதரை திருவிழா.. கலை நிகழ்ச்சிகள் குத்தாட்டங்களை நடத்தினர். தலைமைப் பண்பு இல்லாத ஒருவர் தன்னிடம் இருக்கும் நிதியை வைத்துக் கொண்டு கட்சியை அபகரித்ததை நியாயப்படுத்தும் மாநாடு தான் அது.. முற்றிலும் தோல்வி அடைந்த மாநாடு அது.. பெரும்பாலான தொண்டர்கள் அந்த மாநாட்டை நிராகரித்துவிட்டனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து மாநாடு நடத்தியுள்ளனர். அதை எடப்பாடி பழனிசாமியே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதுவே எதிர்க்கட்சியாக இருந்து இருந்தால் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என அனைத்தும் சென்றிருக்கும். ஆக, ஊழல் செய்வோர் தங்களுக்குப் பல்லாக்கு தூக்குவோராக இருந்தால் தங்களைப் பாதுகாப்போம் என்பதை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

பாஜக மீது அட்டாக்: மத்தியில் உள்ளவர்கள் எங்களுக்குக் கூட்டணிதான்.. பாஜக எங்களுடன் கூட்டணிக் கட்சியாக இருக்கிறார்கள்... அவர்கள் நாடு முழுக்க இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன செய்தார்களோ அதையே அதிமுகவில் செய்கிறது.. சந்திரபாபு நாயுடுவுக்கு கூட்டணியில் இருந்த போது என்ன செய்தார்கள். உத்தவ் தாக்கரேவுக்கு என்ன செய்தார்கள்..

தோளில் கை போட்டு கழுத்தை நெறிப்பார்கள்.. இப்போது அதிமுகவிலும் அதைத்தான் செய்கிறார்கள். கட்சியைப் பிளவுபடுத்தச் சகல வேலைகளையும் அவர்கள் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். சட்டம், நீதி, தர்மம் என அனைத்தையும் தாண்டி கட்டுக்கட்டாக பணம் இருந்தால் போதும் அனைத்தையும் செய்யலாம் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்புகள்: பொன்முடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் தவறு செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் சொல்லியுள்ளது. ஒரு தீர்ப்பைப் படித்துவிட்டு தன்னால் 3 நாட்களுக்குத் தூங்கவே முடியவில்லை என்கிறார் சுப்ரீம் கோர்ட் நீதிபதி. எனவே, கீழமை நீதிமன்றங்கள் தவறு செய்கிறது என்பதை நாங்கள் சொல்லவில்லை.. சுப்ரீம் கோர்ட் சொன்ன கருத்து..

இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை குற்றச்சாட்டையே ஒருவர் முன்வைத்துள்ளார். இப்படி அரசியல் ரீதியாக இக்கட்டான நிலையில், பின்னடைவில் இருக்கும் போது அவருக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இது முதல்முறை இல்லை. ஒவ்வொரு முறை பின்னடைவைச் சந்திக்கும் போதும் அவருக்குச் சாதகமான தீர்ப்பு வருகிறது.

நாங்கள் ஒன்றை மட்டும் தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.. எங்களுக்கான தலைவரை என்றும் நீதிமன்றத்தால் முடிவு செய்ய முடியாது. மக்கள் அனைத்தையும் புரிந்தே வைத்துள்ளனர். அவர்களிடம் சென்று முறையிடுவோம். அவர்கள் சரியான முடிவைக் கொடுப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+