ராமேஸ்வரம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை.. "டாஸ்மாக்கை மூடுங்க.." மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை : ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்," ராமேஸ்வரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் 25.05.2022 அன்று கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இந்த கொடூரமான படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கடல்பாசி எடுக்கச் சென்ற அவரை வழிமறித்து காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி சித்ரவதை செய்து, மிகவும் கொடூரமான முறையில் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளனர்.

பெண் படுகொலை
இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதி 6 பேரை காவல்துறையினர் கைது செய்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென காவல் துறையையும், தமிழ்நாடு அரசையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற குற்றங்கள் நடப்பதற்கு போதை பழக்கமும் காரணமாக உள்ளது. போதைப் பொருள் விற்பனை தடையை கறாராக அமல்படுத்த வேண்டுமெனவும், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

தமிழக முதலமைச்சர்
இந்த பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் தனிக்கவனம் எடுத்து இதுபோன்ற வன்முறையை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, காவல்துறையினருக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் தமிழக அரசை சிபிஎம் வலியுறுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுப்பதற்கு அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் முன்வைத்து வருகிற ஆலோசனைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஎம் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications