ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு... இந்த நிபந்தனைகளை ஏற்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கறார்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டுமெனில் அந்த ஆலையை தமிழக அரசே ஒட்டுமொத்தமாக கையிலெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இது மட்டுமல்லாமல் இன்னும் பல நிபந்தனைகளையும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது தமிழக அரசுக்கு விதித்துள்ளது.

Marxist who imposed conditions to produce oxygen at the Sterlite plant

அதன் விவரம் பின்வருமாறு;

''ஆக்சிஜன் தேவையினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நிலையை கவனத்தில் கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உள்ள அனைத்து வாய்ப்புகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.''

''அதையும் மீறி ஆக்சிஜன் தேவையை ஈடுசெய்ய ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் ஆலையை இயக்க வேண்டுமெனில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு மேற்கொள்ளலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.''
• ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஒட்டுமொத்தமாக கையிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

• அந்த ஆலையில் தாமிரம் உருக்கு உள்ளிட்ட எந்த உற்பத்தியையும் மேற்கொள்ளக் கூடாது. எக்காரணம் கொண்டு இங்கே தாமிரம் உற்பத்திக்கு அனுமதிக்க கூடாது.

•இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முன்னுரிமை அடிப்படையில் தமிழகம் பயன்படுத்திட வேண்டும்.

• ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம். இதை தவிர்த்து மாற்று வழிகளில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு முன்வரக் கூடாது.

• அரசு இந்த ஆலையை இயக்குவது என்கிற முடிவினை மேற்கொள்கிற போது தூத்துக்குடி மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். மக்களது ஒத்துழைப்பின்றி அரசு ஆலையை செயல்படுத்த முனைவது மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

• ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனம், சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனம், நீலகிரியில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம், இமாச்சலப் பிரதேசம் காசோலியில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென தமிழக அரசின் சார்பில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+