முடங்கியது எக்ஸ் வலைதளம்.. புதிய பதிவுகளை பதிவிட முடியாததால் நெட்டிசன்கள் கடும் அவதி
சென்னை: எக்ஸ் சமூக வலைதளம் திடீரென்று முடங்கி உள்ளது. எக்ஸ் வலைதளத்தில் லாக்-இன் செய்ய முடியாத நிலையில் புதிய பதிவுகள் பதிவிட முடியவில்லை. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் உள்ளார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று மாற்றினார். இந்நிலையில் தான் இன்று மாலை 6 மணிக்கு நம் நாடு உள்பட பல வெளிநாடுகளில் எக்ஸ் சமூக வலைதளம் முறையாக வேலை செய்யவில்லை. திடீரென்று எக்ஸ் வலைதள பக்கம் முடங்கியது.

அதாவது இன்று மாலை சுமார் 6 மணியளவில் எக்ஸ் வலைதள பக்கத்தை லாக்- இன் செய்ய முடியவில்லை. லாக் இன் செய்தவர்களால் எக்ஸ் பக்கத்தில் உள்ள பதிவுகளை Refresh செய்து பார்க்க முடியவில்லை. அதேபோல் புதிய பதிவுகளையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட முடியவில்லை.
புதிய பதிவுகளை பார்க்கலாம் என்று லோட் செய்தால் Something went wrong, Try reloading என்று வருகிறது. இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் எனும் வலைதளத்தில் மொத்தம் 2,100 புகார்கள் பதிவாகி உள்ளது. அதாவது எக்ஸ் வலைதளத்தில் பயனர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சனை செல்போன் மட்டுமின்றி டெஸ்க்டாப்பிலும் எதிரொலித்தது. இதனால் நெட்டிசன்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனை பற்றி இன்னும் எக்ஸ் வலைதள பக்கத்தின் நிறுவனம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. எக்ஸ் வலைதள பக்கம் முடங்கி உள்ளதை நெட்டிசன்கள் தங்களின் பிற வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினருக்கும் எக்ஸ் வலைதள பக்கம் வழக்கம்போல் பிரச்சனைகள் இன்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் வலைதள பக்கம் இப்படி பிரச்சனையை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை இதுபோன்ற பிரச்சனைகள் வந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நேற்று கூட சிலருக்கு டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு அது சரியானது. இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக எக்ஸ் வலைதள பக்கம் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications