மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு
சென்னை: முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்தினர் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொலை செய்தனர்.

இந்த கொடூர நிகழ்வை நினைவு கூறும் விதமாக மே 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் திருமுருகன் காந்தி தலைமயில் மே 17 இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் கடந்த மே19ம் தேதி சென்னை தியாகராய நகர் முத்துரங்கள் சாலையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய திருமுருகன் காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சில சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூட்டத்தில் பேசியதற்கான வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், மாம்பலம் போலீசார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 153(ஏ), 505(வி) (11) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications