அண்ணாமலைக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்.. சீரியசாகி பிரஸ் மீட்டையே முடித்த வைகோ!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என சென்னை பத்திரிகையாளர்களிடம் காட்டமாக தெரிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுக தொடங்க உயிர்த் தியாகம் செய்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடி மழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் அக்கட்சி சார்பாக அக்டோபர் 10-ந் தேதி சூளுரை நாள் கடைபிடிக்கப்படுகிறது. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அதைக் கண்டித்து தீக்குளித்த உயிரிழந்தவர்கள் இவர்கள்.

சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் உயிர் தியாகம் செய்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் "தமிழ்த் திருநாட்டின் உயர்வுக்காகவும், தமிழர்களின் மேன்மைக்காகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும் என்ற சூளுரை ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், தென் சென்னை கிழக்கு கே. கழகக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி பிரச்சனை: இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசை வலியுறுத்தவே செய்கிறது. மத்திய அரசுக்கு எந்த வித உத்தில் அழுத்தம் தர முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். நானும் துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றோம். தமிழ்நாட்டு எம்.பிக்கள் அனைவரும் சென்றோம். மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் அதே நேரத்தில் உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு காவிர் நீர் தர வேண்டும் என்றது. ஆனால் கர்நாடகா அரசு பொருட்டாக மதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே பொருட்டாக கருதாமல் உதாசீனம் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்கிறது கர்நாடகா. மூன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி காய்ந்து கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தல் பணிகள்: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறோம். பொதுக்குழுவுக்குப் பின்னர் மாவட்ட வாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் தேர்வுக்கான கூட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை. எங்கள் எண்ணம் என்ன என்பதை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க முடியாது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது. நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறும. இவ்வாறு வைகோ கூறினார்.
அண்ணாமலைக்கு பதில் இல்லை: அப்போது, திமுக கூட்டணி மீதான தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தை மேற்கோள்காட்டி பத்திரிகையாளர் ஒருவர் வைகோவிடம் கேள்வி கேட்டார். இதற்கு சட்டென, அண்ணாமலைக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என சீரியசாகவே முகம் மாறிய நிலையில் பிரஸ் மீட்டையே முடித்துக் கொண்டார் வைகோ.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications