சென்னை பேரணி மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் -வைகோ
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பேரணி முழு வெற்றி பெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் என அவர் கூறினார்.
இதனிடையே செய்தியாளர் ஒருவர் ஹெச்.ராஜா பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்ல விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அவரை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என வைகோ கோபம் அடைந்தார்.

வைகோ பேட்டி
குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்திய பிரமாண்ட பேரணி முழு வெற்றி பெற்றதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். லட்சகணக்கானோர் இந்த சட்டத்துக்கு எதிராக சீறி எழுந்து இந்த பேரணியில் தன்னார்வமாக கலந்துகொண்டார்கள் எனக் கூறினார்.

குலை நடுக்கம்
சென்னையில் லட்சகணக்கில் திரண்ட கூட்டத்தை கண்டு மத்திய அரசுக்கு குலை நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்பார்க்காத வகையில் கூட்டம் திரண்டிருந்ததாகவும் வைகோ கூறினார். முட்டாள்தனமாக முடிவெடுத்துவிட்டோம் என மத்திய அரசு நிச்சயம் நினைக்கும் என வைகோ தெரிவித்தார்.

உணர்ந்திருக்கும்
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் குளவிக் கூட்டில் மத்திய அரசு கை வைத்து விட்டது என்றும், இப்போது வழிதெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தச் சட்டத்தால் லட்சகணக்கானோர் சீறி எழுந்துள்ளதாக கூறினார்.

நல்ல பதில்
இதனிடையே மாணவர்களை வைகோ பகடைகாயாக பயன்படுத்த பார்க்கிறார் என ஹெச்.ராஜா கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, நல்ல விஷயம் தொடர்பாக பதில் அளித்து வருகிறேன், அவரை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கோபம் அடைந்தார் வைகோ.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications