வைகோவின் சகோதரி சரோஜா காலமானார்.. சென்னையில் பிரிந்த உயிர்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 2வது சகோதரியான சரோஜா இன்று காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் இன்று சென்னையில் பிரிந்த நிலையில் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பவர் வைகோ. தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். வைகோவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியாகும்.

வைகோவின் தந்தை பெயர் வையாபுரி. தாய் பெயர் மாரியம்மாள். வைகோவிற்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். வைகோவின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன்.
வைகோவின் 2வது சகோதரி சரோஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அவர் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. சரோஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வைகோ நேரில் சென்று தனது சகோதரிக்கு அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications