Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை? கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரபரப்பு! கொதித்தொழுந்த வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவர்களை தேர்வு மைய கண்காணிப்பாளர் தடுத்து விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்றது.

கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தேர்வு எழுத இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது அவர்களை தேர்வு மைய கண்காணிப்பாளர் சரஸ்வதி தேர்வு அறைக்குள் செல்லவிடாமல் தடுத்ததாகவும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என கூறியதாகவும் புகார் எழுந்தது.

தேர்வெழுத தடை

தேர்வெழுத தடை

தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேர்வு கண்காணிப்பாளர் சரஸ்வதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளார்.

ஹிஜாப் சர்ச்சை

ஹிஜாப் சர்ச்சை

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி விட்டு சீருடையில் தேர்வு எழுதும்படியும் கூறி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 6 முஸ்லிம் மாணவிகளும், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாப்பை அகற்றி விட்டு, சீருடையில் தேர்வு எழுதினர் என்ற தகவலை அறிந்து மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர்.

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி நடத்தும் கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அம்மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது. அத்தகைய இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டு, மதவெறியைத் தூண்ட முயற்சிப்பதைத்தான் உளுந்தூர்பேட்டை நிகழ்வு காட்டுகின்றது.

வைகோ கண்டனம்

வைகோ கண்டனம்

இந்தியாவிலேயே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டு மண்ணில், மதவெறியைத் தூண்ட முயற்சிப்போரை, முளையிலேயே இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும். உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது, கல்வித் துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+