Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று 26வது மெகா தடுப்பூசி முகாம்.. 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது..!

26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது... இந்த முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

Recommended Video

    கொரோனா 4வது அலை வரலாம்.. 100 % தடுப்பூசி கட்டாயம் மக்களே.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..!

    உலகையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தமிழ்நாட்டையும் பதம் பார்த்தது.. அந்த வகையில், இதற்கான சிகிச்சைகள், மருந்துகள் என்ன என்று ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றுதான் நமக்கு கை கொடுத்துள்ளதால், உலக நாடுகள் இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம்

    தமிழகம்

    தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணி கடந்த வருடம் ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது... இதில், ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் தனித்தனியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது... முதலில் 18 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.. இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    இன்னும் 2 டோஸ் தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.. அதேபோல், முதல் டோஸ் தடுப்பூசி போடாமல் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. புதுபுது வைரஸ்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பல ரூபங்களில் விஸ்வரூபமாகி உள்ளனர், இவர்கள் எல்லாம் இன்னமும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதது சுகாதாரத்துறைக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.. அதனால்தான் தொடர்ந்து இப்படி தடுப்பூசி முகாம்களையும் அம்மக்களுக்காக நடத்தி கொண்டிருக்கிறது.

     மெசா சிறப்பு முகாம்

    மெசா சிறப்பு முகாம்

    அந்த வகையில், தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.. மொத்தம் 50 ஆயிரம் மையங்களில் நடக்க உள்ளது.. 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். மெகா சிறப்பு முகாம்களில் முன்பு 20 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.. இன்று நாளை நடைபெறும் முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மறுபடியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

     சென்னை

    சென்னை

    சென்னை பொறுத்தவரை தொற்று பாதிப்பு எண்ணிக்கையுடையோர் அதிகம் உள்ள மாவட்டம் ஆகும்.. அதிலும் முதல் மாவட்டமாகும்.. இப்போதைக்கு முதல் டோஸ் 98 சதவீதமும், 2-வது டோஸ் 87 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் இன்றைய தினம் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் இந்த முகாம்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+