Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீன்கள் இறக்கும்.. உப்புநீர் கசப்பாகும்! அப்படியே ஆசிட்டாக "மாறும்" கடல்கள்.. ஆரம்பித்த கெட்ட காலம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகில் பல்வேறு கடல்கள் ஆசிட்டாக மாறும் வாய்ப்புகள் உள்ளன, இதனால் கடல் நீர் உயிரினங்கள் வாழ தகுதியற்ற நீராக மாறலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Science என்ற சர்வதேச அறிவியல் இதழில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவருவது வழக்கம். இந்த இதழில்தான் தற்போது கடல் மாசு குறித்து ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.

ஆர்டிக் கடலில் 1994-2022 வரை ஏற்பட்ட மாறுபாடுகளை ஆய்வு செய்து இந்த கட்டுரையை வெளியிட்டு உள்ளனர். இதில்தான் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடல்

கடல்

அந்த ஆய்வு கட்டுரையில் கடந்த 16 வருடங்களில் கடல் நீரில் ஆசிட் அளவு 3 - 4 மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற கடல்களை விட ஆர்டிக் கடல் வேகமாக இப்படி ஆசிட் மயமாகி உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. ஐஸ் பாறைகள் உருகி, உருகி, கடல் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க இப்படி நடப்பதாக அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது. உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம் காரணமாக துருவ பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.

ஆசிட் அளவு

ஆசிட் அளவு

அந்த வகையில்தான் ஐஸ் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிப்பதால் இப்படி கடலில் ஆசிட் அளவு அதிகரிப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் 2050க்குள் ஆர்டிக் கடலில் ஆசிட் அளவு மிக மோசமான நிலையை அடையும். அதாவது இங்கே மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் வாழவே முடியாத நிலை ஏற்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் மிக கடுமையாக பாதிப்பு அடையாளம் என்று கூறப்பட்டு உள்ளது.

 ஐஸ் பாறைகள்

ஐஸ் பாறைகள்

கடலை சார்ந்து வாழும் உயிரினங்கள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆர்டிக் கடலில் ஏற்படும் பாதிப்பு அதன்பின் மற்ற கடல்களுக்கும் செல்லும் என்று இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடலில் உள்ள உயிரினங்கள், அதை சார்ந்து உள்ள உயிரினங்கள், கடலில் உள்ள தாவரங்கள் பாதிக்கும். உதாரணமாக நாடுகளின் ஓடுகள் கூட உடையும் வாய்ப்புகள் உள்ளன.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

தற்போது கடலில் உள்ள நீரின் பிஎச் அளவு 8.1 ஆக உள்ளது. இதுதான் பல மடங்கு உயரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐஸ் கட்டிகள் உருகும் போது அதனால் கார்பன் டை ஆக்சைட் அதிகரிக்கும். இதன் நீரில் கார்பன் அயான் அளவு அதிகரிக்கும். இதனால் கடலில் உள்ள நீரில் இருக்கும் பிஎச்சை குறைக்கும் திறன் குறைந்து போகலாம். இதனால் தானாக பிஎச் அதிகரிக்கும். இது கடலை ஆசிட் கடலாக மாற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+