Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கி வரும் காவிரி.. ஒரே ஆண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. செழிக்கும் வளம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: மேட்டூர் அணை 2வது ஆண்டாக நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிப்பு எட்டி உள்ளது. 7வது முறையாக நிரம்பியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி....

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளையும், முக்கிய எச்சரிக்கைகளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Mettur dam flood rain

தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோரப் பகுதிக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 20 காலை 08:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி இந்த அணை 1925 இல் துவங்கி 1934 கட்டி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது இதன் மூலம் 13 டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்

மேட்டூர் அணை நடபாண்டில்

ஜூன் 29
ஜூலை 5
ஜூலை 20
ஜூலை 25
ஆகஸ்ட் 20
செப்டம்பர் 2
என மொத்தமாக நடபாண்டில் மேட்டூர் அணை ஆறு முறை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது

மேட்டூர் அணை

அதனை தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்தது இதனால் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வந்தது

இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து கடந்த ஐந்து தினங்களாக படிப்படியாக அதிகரித்தது நேற்று காலை 14 ஆயிரத்து 420 கனடியாக இருந்தது அதனை தொடர்ந்து மதியம் நீர் வரத்து மேலும் அதிகரித்தது இதன் காரணமாக மேட்டூர் அணை நடபாண்டில் ஏழாவது முறையாக நிரம்பியது

தொடர்ந்து ஆணைக்கு வரும் நீர் முழுமையாக 22500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை சுற்றியுள்ள
தங்கமாபுரி பட்டினம் சேலம் கேம்ப் ஆர் எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்தாண்டு அக்டோபர் 22 ல் 98.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் அக்டோபர் 23 ல் 100 அடி உயர்ந்தது தொடர்ந்து இன்று 365 வது நாளாக ஓராண்டு நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிக்கிறது நாளை இரண்டாவது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிப்பது விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+