அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு ‘ஜாக்பாட்’.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பதிலுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டபையின் 5 ஆம் நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். புதிய முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 3,400 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அரசு பள்ளிகள் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்க ஏதுவாக, ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications