"ஆ.ராசா திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்”.. கொந்தளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருமாவளவனை விமர்சித்த திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆ.ராசா திருமாவளவனிடம் மன்னிப்பு கோரவேண்டும் என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக எம்.எல்.ஏ வன்னியரசு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகான் ஆகியோர் இன்று பதவியேற்றனர். தவெக அமைச்சரவையில் விசிக இணையும் முடிவை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி சாடியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "திமுகவில் இன்று கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் இல்லை. சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆ.ராசா விமர்சித்துள்ளார். மக்களின் தீர்ப்பை தான் ஜனநாயக சக்திகள் செயல்படுத்தி உள்ளன. தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆ.ராசாவை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டிக்க வேண்டும். பெண்ணின் உறவை வைத்து பேசும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி ஒரு கட்சியின் தலைவரை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட பதிவினை கடுமையாக கண்டிக்கிறோம்" என்றார்.
மேலும் பேசிய ஆதவ் அர்ஜுனா, "சமூகநீதி, மதச்சார்பற்ற அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார். சாதிய அரசியல், மத அரசியல், பண அரசியல் என அனைத்தையும் தூக்கி எறிந்துள்ளார் முதலமைச்சர் விஜய். சாதி, குடும்ப பின்புலம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து இளைஞர் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவே பார்த்து பிரமிக்கும் வகையில் ஒரு இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு உறுதியாக உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார். 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அதிகாரம் ஒருவரிடம் மட்டும்தான் இருக்க வேண்டுமா? என முதன்முதலில் கூறியவர் திருமாவளவன்.
அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்த நாள்தான் உண்மையான சமூக நீதி நாள் என முதலமைச்சர் விஜய் கூறினார். விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் விஜய் நெகிழ்ந்து போனார்.
த.வெ.க வெற்றி பெறவே பெறாது என்றார்கள், கடுமையாக உழைத்ததால் வெற்றி சாத்தியமாகி உள்ளது. த.வெ.க. வெற்றிபெற கடுமையாக உழைத்தவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராக நியமிக்கும் வரை ரமேஷின் சாதி எங்களுக்கு தெரியாது. பெரியார், அண்ணா, அம்பேத்கர் கொள்கைகள் வழியில் தான் தவெக அரசு செல்லும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications