Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜாஜி ஹாலில் மயங்கினேன்.. "தாத்தா" இறந்த போதும் மகேஷ் எங்கே என கேட்ட உதயநிதி.. அன்பில் சிலாகிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் மயங்கிய என்னை தேடி வந்து உதவி செய்தவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் அன்பில் மகேஷ் சிலாகித்து பேசினார்.

Recommended Video

    நம்முடைய பெருமை சர்வதேச அளவுக்கு போக வேண்டும் - Anbil Mahesh *Politics

    அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், டிஆர் பாலு மகன் டிஆர்பி ராஜா, டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் சிறுவயது முதல் நண்பர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தாலே அந்த இடத்தில் சிரிப்பும் கலாட்டாக்களும் களைகட்டும் என்பார்கள் அவருடன் இருப்பவர்கள்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்து கொண்ட போது உதயநிதி ஸ்டாலின் கைதட்டி ஆனந்த கண்ணீர் மல்க தனது நண்பனின் வளர்ச்சியை ரசித்தார்.

    சட்டசபை

    சட்டசபை

    அது போல் சட்டசபையில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் பேசிய போது அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த அன்பில் மகேஷ் நண்பனின் கன்னிப் பேச்சை (சட்டசபையில் முதல்முறையாக உரை) கண்டு ரசித்தார். இப்படியாக இவர்களுக்குள் உணர்வுபூர்வமான நட்பு உள்ளது.

    உதயநிதி

    உதயநிதி

    சேப்பாக்கம் தொகுதியில் நண்பன் உதயநிதியின் செயல்பாடுகளை பார்த்த அன்பில் மகேஷ் , தனது உதயநிதியின் சேவை ஒரு தொகுதியுடன் நின்றுவிடக் கூடாது, தமிழகம் முழுவதும் கிடைக்க வேண்டும் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திருச்சி திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றினார்.

    சென்னை தினம்

    சென்னை தினம்

    இந்த நிலையில் சென்னை தினத்தையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த சென்னை மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் வருத்தத்தையும் கொடுத்துள்ளது. வருத்தம் என்னவென்றால் தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசியாக சிகிச்சை பெற்றது.

    கருணாநிதி

    கருணாநிதி

    பின்னர் அவர் காலமானது, இவையெல்லாம் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. அவரது உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைப்பதற்காக ராஜாஜி ஹாலில் அவரது உடலுடன் நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருந்த நிகழ்வும் எனக்கு வருத்தமளிக்கிறது. அப்போது கருணாநிதி மறைவால் மிகவும் மனவேதனை அடைந்து நான் மயங்கிவிட்டேன்.

     மயங்கிய எனக்கு உதவிய உதயநிதி

    மயங்கிய எனக்கு உதவிய உதயநிதி

    அப்போது கூட தாத்தா இறந்திருக்கிறார் என்ற போதிலும் மகேஷ் எங்கே என கேட்ட உதயநிதி, மயங்கிய எனக்கு முதலுதவி கொடுத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தலைவரின் உடல் அருகே அழைத்து சென்றார் என அன்பில் மகேஷ் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். உதயநிதி, கிருத்திகாவை காதலிப்பதையும் முதலில் தன்னிடம் சொல்லியதுடன் அந்த பெண்ணை பார்க்க கோயிலுக்கு தன்னை அழைத்துச் சென்றதாகவும் வேறு ஒரு பேட்டியில் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+