அமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் மகனை நலம் விசாரிப்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அங்கு சென்றுள்ளார்.

முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் துறை சார்ந்த வளர்ச்சிப்பணிகளுக்காக எனக் கூறி கடந்த இரண்டு வார காலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றுவிட்டு நேற்று முன் தினம்தான் சென்னை திரும்பினார்.

minister c.v.shanmugam why went to singapore?

விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத், உள்ளிட்டோர் வெளிநாடுகளில் உள்ள நிலையில், அமைச்சர்கள் கே.சி.அன்பழகன், சி.வி.சண்முகம், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் புதிதாக நேற்று வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர்.

அதில் சி.வி.சண்முகம் அரசுமுறை பயணமாக இல்லாமல் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ளாராம். அண்மையில் விபத்தில் படுகாயமடைந்த சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனுக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாம். இதனால் அண்ணன் மகனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சி.விசண்முகம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இதேபோல் எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றுள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இதுவும் அரசுமுறை பயணம் இல்லை எனக் கூறப்படுகிறது.

குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாகவே அவரும் சென்றுள்ளாராம். இதனிடையே கடந்த மாதம் தாம் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மாஃபா பாண்டியராஜன் அரசுமுறை பயணமாக சென்று கலந்துகொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+