அணையை தூர் வாருவதாக சும்மா சொல்லிக்க வேண்டியது தான்! உலகின் எந்த நாட்டிலும் இது இல்லை! -துரைமுருகன்
சென்னை: அணையை தூர் வாருவதாக சும்மா சொல்லிக்க வேண்டியது தான், ஆனால் உலகின் எந்த நாட்டிலும் இது கிடையாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அணைகளில் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ள மணல்போக்கிகள் மூலம் ஆட்டோமெட்டிக்காக அங்கிருந்து மணல்கள் ஆற்றுக்கு சென்றுவிடும் என்ற தகவலையும் வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி அணை தூர்வாருவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் இதனைத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அணை
தமிழக சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி அணையை தூர் வாருவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அணையை தூர் வாருவதாக சும்மா சொல்லிக்க வேண்டியது தான், ஆனால் உலகின் எந்த நாட்டிலும் இது கிடையாது எனக் கூறினார்.

மணல் போக்கிகள்
அணைகள் கட்டப்படும் போதே மணல் போக்கிகள் அங்கு வைக்கப்படும் என்றும் அந்த மணல் போக்கிகள் வழியாகத்தான் அணைகளில் இருந்து எவ்வளவு மண் வேண்டுமானாலும் வெளியேறி ஆற்றுக்குச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார். அணைகள் முழுவதையும் தூர்வார ஆரம்பித்தால், அந்த மண்ணை கொட்டுவதற்கு எங்கு போவது என்ற வினாவை எழுப்பிய அமைச்சர் துரைமுருகன் இயற்கையாகவே அணைகளில் இருந்து மண் வெளியேறிவிடும் எனக் கூறினார்.

தனி முயற்சி
இதனால் அணைகளில் இருந்து மண்ணை அள்ளுவதற்கான தனி முயற்சி தேவையில்லை என்றும் இது தான் சட்டரீதியாகவும் மெய்ஞனரீதியாகவும் பொதுப்பணித்துறையில் கண்டறியப்பட்ட உண்மை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். அணையில் தூர்வார முடியாது என்பது ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தெரிந்திருக்கும் என அவர்களை சுட்டிக்காட்டியும் அவர் பேசினார்.

அவ்வளவு அக்கறையா?
இதனிடையே பதிலளிப்பதற்கு முன்னர் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ. அசோக் குமாரை நோக்கி, ''கிருஷ்ணகிரி அணை மீது அவ்வளவு அக்கறை இருந்தால், நீங்க தனிக் கேள்வி ஒன்றே கேட்டிருக்கலாம். அதைவிடுத்து யாரோ கேட்ட கேள்வியில் துணைக் கேள்வி கேட்கிறீர்கள், பரவாயில்லை உங்களுக்கு பதில் சொல்கிறேன்'' என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் உறுப்பினரை கலாய்த்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications