தமிழ்மொழி குறித்த ட்வீட்டை முதல்வர் திடீரென நீக்கியது ஏன்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
Recommended Video
சென்னை: தமிழ்மொழி குறித்த ட்வீட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென நீக்கியது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கொண்டு வருவதற்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தின்படி 3-ஆவது மொழியாக இந்தியை தமிழக மாணவர்கள் கட்டாயம் படிப்பதாகும். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து கட்டாய இந்தி என்பதற்கு பதிலாக விருப்பமொழியாக எந்த மொழியை படிப்பது என்பதை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவர் ட்விட்டரில் கூறுகையில் பிற மாநிலங்களில் தமிழை 3-ஆவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்.

எடப்பாடி ட்வீட்
பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான மொழிக்கு செய்யும் சேவையாகும் என எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் மும்மொழி கொள்கையின்படி இந்தியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கிறாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

கேள்வி
இதையடுத்து திடீரென முதல்வர் ட்வீட்டை நீக்கினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் ட்வீட் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

முற்றுப்புள்ளி
அப்போது அவர் கூறுகையில் தமிழ்மொழி பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்பதால் முதல்வர் ட்வீட் செய்தார். ஆனால் முதல்வரின் ட்விட்டரில் கூறிய கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது. இந்தி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ட்வீட் நீக்கப்பட்டது.

பின்வாங்க மாட்டோம்
இந்தியை எந்த நிலையிலும் எந்த வடிவத்திலும், எந்த ரூபத்திலும் தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும். இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்.

விளக்கம்
டெல்லி, ஆந்திரா , கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. பிற மாநிலங்களில் உள்ள குழந்தைகள் தமிழை விருப்ப பாடமாக படிக்க ஆர்வமாக இருப்பதாக அவரது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால்தான் முதல்வர் அவ்வாறு ட்வீட் செய்திருந்தார் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications