எதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வனுக்கு பச்சைக் கொடி காட்டிய அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video
சென்னை: எதிர்ப்புகளையும் மீறி தங்கதமிழ்ச் செல்வன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினகரன் கட்சியிலிருந்து விலகி திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தார். அப்போதிலிருந்தே தங்கதமிழ்ச் செல்வனும் திமுகவில் இணைவார் என்ற பேச்சு அடிப்பட்டது.
இந்த நிலையில் அந்த தகவலை மறுத்தார். இதைத் தொடர்ந்து அமமுகவிலிருந்தபடியே நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். ஆனால் தேனி எம்பி தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை சந்தித்தார்.

பிரச்சினை
அமமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் செல்வதை தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் நிறுத்திவிட்டனர். இதிலிருந்து தினகரனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது.

தங்கதமிழ்ச் செல்வன்
இந்த நிலையில் உள்ளுக்குள்ளேயே இருந்த மோதல் நேற்று முன் தினம் முதல் வெளியே வந்தது. தினகரனை தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ வெளியானது. இதனால் கோபம் அடைந்த தினகரன் விரைவில் தங்கதமிழ்ச் செல்வன் நீக்கப்படுவார் என்றார்.

மரியாதை
மேலும் தங்கதமிழ்ச் செல்வனை அதிமுகவுக்கு அழைத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தினகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாபொ சிவஞானத்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமமுக
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீறுகின்றனர். தினகரன் கட்சியில் உள்ள 4 பேரும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாமம்
தினகரன் அணியினரை கட்சியில் சேர்க்க கட்சி தலைமை முடிவு செய்யும். கொள்கை, கோட்பாடு, லட்சியம் ஆகிய மூன்றும் இல்லாத அமமுகவுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்.

நிரந்தர நண்பரும் இல்லை
தங்கதமிழ்ச் செல்வன் உள்பட யாரையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. தினகரன் அணியினர் அதிமுகவில் சேர எந்த முட்டுக்கட்டையும் இல்லை. தங்கதமிழ்ச் செல்வனை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்றார். தங்கதமிழ்ச் செல்வனை அதிமுகவில் இணைத்து கொள்ள ஒரு தரப்பு ஆட்சேபம் தெரிவிக்கிறது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications