காலேஜ் எலெக்ஷன்.. எப்படி யோச்சிருக்காரு பாருங்க ஜெயக்குமார்.. அட தலையில ஏகப்பட்ட முடி வேற!
Recommended Video
சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இன்று முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அதிமுக அரசின் செய்தி தொடர்பாளர் போல் ஒவ்வொரு விஷயங்களும் ஜெயக்குமார் தான் பதில் அளித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்திலேயே தேர்தலில் வித்தியாசமாக சிந்தித்து நோட்டீஸ் அடித்து அசரடித்துள்ளார். தனது மலரும் நினைவினையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் 1991ம்ஆண்டு ராயபுரம் தொகுதியில் முதல்முதலாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2001ம்ஆண்டு , 2006ம் ஆண்டு. 2011ம் ஆண்டு, 2016ம் ஆண்டும் ராயபுரம் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் ஜெயக்குமார் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஜெயக்குமாருக்கு தற்போது 58 வயதாகிறது. சென்னை தியாகராயா கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் பட்டம் பெற்றவர் ஆவார்.

கல்லூரி தேர்தலில் ஜெயக்குமார்
இவர் 1977 மற்றும் 78ம் ஆண்டுகளில் தியகராய கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது, கல்லூரியில் நடந்த மாணவர் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.அப்போது ஜெயக்குமார் தான் அடித்த தேர்தல் விளம்பர நோட்டீஸை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
ஆச்சர்ய நோட்டீஸ்
அந்த நோட்டீஸ் நிச்சயம் பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கும். ஏனெனில் அதில் தனது பெயர் வருவது போல் வித்தியாசமான கருத்துக்களோடு நோட்டீஸ் அடித்துள்ளார்.அதில் "தைரியமாக செயல்படுவேன் ஆனால் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்த மாட்டேன். கொஞ்சமும் சூழ்ச்சி செய்ய மாட்டேன். செயல்படுவேன் ஆனேன் வலுச்சண்டைக்கு போக மாட்டேன்.

உரிமைகளை காப்பேன்
நான் உங்களுக்கு சேவை செய்பவனாக இருப்பேன். ஆனால் அடிமையாக இருக்க மாட்டேன். அதிகாரம் இருக்கும் ஆனால் சர்வாதிகாரம் இருக்காது. அன்பாக மற்றும் திறந்த மனதோடு இருப்பேன் ஆனால் புதிராக இருக்க மாட்டேன். உரிமைகளை காப்பவனாக இருப்பேன், ஆனால் அதில் அரசியல் செய்ய மாட்டேன். ஒழுக்கத்தை போற்றுபவனாக இருப்பேன். ஆனால் பிரச்னைகளை உருவாக்குபவனாக இருக்கமாட்டேன். சுமூகமாக செயல்படுவேன், ஆனால் நிர்பந்திக்க மாட்டேன். அனைவருக்கும் நண்பரான இருப்பேன். ஆனால் யாருக்கும் எதிராக இருக்க மாட்டேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

பெயரே வருது
இந்த கருத்தின் ஆங்கிலத்தின் படி பார்த்தால் டி ஜெயக்குமாரின் ஜெனரல் எஸ்இஒ என்று வரும். இநத பதிவினை சமூக வலைதளத்தில் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார் .இதை பார்த்த பலரும் அமைச்சர் ஜெயக்குமாரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் அப்பவே அப்படி, அதனால் தான் 6முறை ராயபுரம் தொகுதியில் எம்எல்ஏ ஆகி உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் பாராட்டி உள்ளனர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications