தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது! நலமுடன் வீடு திரும்பிய அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன்!
சென்னை: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவர்கள் அறுவுரைப்படி இன்னும் ஓரு வாரமாவது அவர் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மருமகன் பிரபல மருத்துவர் என்பதால் அவரது சிகிச்சை விவகாரத்தை அவரே கவனித்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்க மேலதான் சந்தேகம்.. ஆளுநரை '23ஆம் புலிகேசி’னு நினைச்சீங்களா? அண்ணாமலையை வறுத்தெடுக்கும் திமுக!
அமைச்சருக்கு நெஞ்சுவலி
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவருக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. மேலும், உடல் அசவுகரியமாக இருந்ததால் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன் அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் குழு
இதையடுத்து இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. மேலும், அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அமைச்சரின் உடல்நிலை சீரானதை அடுத்து நேற்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கும் அவர் இன்னும் ஒரு வாரகாலம் ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது.
விருதுநகர் மாவட்ட திமுக
இதனிடையே அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி எனத் தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் பதறிப்போய் சென்னைக்கு வருகை தருவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் தரப்பிலிருந்து அப்படியெல்லாம் யாரும் வரவேண்டாம், அமைச்சருக்கு ஒன்றுமில்லை சிறிய பரிசோதனை தான் எனக் கூறி அவர்களை தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதற்கு காரணம் மருத்துவர்கள் அறிவுரைப்படி அமைச்சருக்கு ஓய்வு தேவைப்படுவதே ஆகும்.
முதல்வர் நலம் விசாரிப்பு
அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உடல்நலம் பற்றி விசாரித்ததோடு ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.