தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் 'மாஸ்க்' கட்டாயம்.. கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க அதிரடி
சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது. ஆனால், உருமாறிய கொரோனா வைரஸ் அவ்வப்போது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் எஸ்பிபி, பிஏ 2 ஆகிய இரண்டு வைரஸ்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் தினந்தோறும் குறைந்தபட்சம் 500 பேர் புதியதாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நேற்றைய நிலைவரத்தை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400க்கும் அதிகமானோர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு குறைவாகதான் இருக்கிறது. இருப்பினும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று (மாரச் 31) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பினனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முகக்கவசம் கட்டாயம் என்பதை கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசியதாவது, "மாநில சுகாதார பேரவை தேசிய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த பேரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
சர்வதேச அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேரவை மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளிவல் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சதவிகிதம் ரோண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 பெருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள்தான் இருக்கிறது.
இருப்பினும் சில நடைமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. எனவே நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றம் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அச்சமடைய வேண்டியதில்லை. வரும்முன் காப்போம் என்பதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது அவசியம். இது மருத்துவமனையிலிருந்து தொடங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications