சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை புதிய தலைமை செயலகமாக மாறுகிறதா.. அமைச்சர் மா.சு. பதில்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறுகிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலை வாலாஜா சாலை சந்திப்பில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்டது.

இது 9.30 லட்சம் சதுர அடி பரப்பளவாகும். ஆனால் 2011 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் தலைமைச் செயலகம் பழையபடி புனித ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்படும் என்றும் புதிய கட்டடம் மருத்துவமனையாக செயல்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த கட்டடம் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பாக வைத்தியம் பார்க்கப்படுகிறது. இங்கு உள்நோயாளியாக நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அரசு மருத்துவமனையை காட்டிலும் இட வசதி அதிகமாக இருக்கிறது.
அது போல் தரமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்த நிலையில் தற்போது 2021 இல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதலே புதிய தலைமைச் செயலகக் கட்டடம் என்னவாகும் என்ற விவாதங்கள் நடந்தன. ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு அந்த கட்டடத்தில் தலைமைச் செயலகம் அமையும் என சொல்லப்பட்டது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் இந்த கட்டடம் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடம். கடந்த ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவமனையாக மாற்றினார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் பரந்த உள்ளத்தோடு, மருத்துவமனையான பிறகு அது மருத்துவமனையாகவே தொடரட்டும் என கூறினார்.

புதிய பல்வேறு பன்னோக்கு சிகிச்சைகளை இங்கு தொடங்கவும் உத்தரவிட்டு அதை தொடங்கியும் வைத்துள்ளார். 34 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ரோபாட்டிக் கருவி ஒன்றை இந்த மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்த கருவி இந்தியாவில் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லை.
இந்த கட்டடத்தில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்த தொடங்கவுள்ளோம். முன்பெல்லாம் 400 பேர் அளவுக்குத்தான் சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது 1000 பேர் வரை வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் இன்னும் கட்டமைப்பை உயர்த்துவோம் என மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications