என்னது மருத்துவமனைகள் நிரம்பி வழியுதா? தவறான செய்தியாம்.. சொல்வது அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள் என்பது தவறான செய்தி என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. 2016 2017-ம் ஆண்டுகளில் தான் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்தன. அந்த நிலை தற்போது இல்லை. நடப்பு ஆண்டில் இதுவரை 5 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தமிழகத்தின் எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை. மழைக்காலம் வரவுள்ளதால், தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள் என்பது தவறான செய்தி" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications