இடைத்தரகர்களுக்கு செக்! பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் வரக்கூடாது! அமைச்சர் மூர்த்தி அதிரடி!
சென்னை: ஆவண எழுத்தர்களும், இடைத்தரகர்களும் அனுமதியின்றி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் செல்ல அதிரடி தடை விதித்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.
சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் அழைக்கும் போது சென்றால் போதுமானது என்றும் தேவையற்ற கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும் முறைகேடுகளை களையும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் ரொக்கமாக பணம் கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றும் கார்டுகள் மூலமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமும் பணம் கட்டிக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவித்திருப்பதையும் அமைச்சர் மூர்த்தி சுட்டிக்காட்டினார்.
போலி பத்திரப்பதிவுகளை கண்டறிந்து ரத்து செய்வதற்கு இதுவரை 14,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் அதில் 2,000 விண்ணப்பங்கள் மீது தீர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். பத்திரப்பதிவு துறையில் கடந்த 2 ஆண்டுகளில் எண்ணற்ற மாற்றங்களையும், புதுமைகளையும் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
பத்திரப்பதிவு நடைமுறையை எளிமையாக்குவதற்கான எல்லா பணிகளையும் செய்து வருவதாகவும் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சென்று பணம் கட்டுவதை தவிர்ப்பதற்காகவே ஆன்லைன் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்திருப்பதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பணம் கேட்டால் தாராளமாக தன்னிடம் ஊடகத்தினரும், சம்பந்தபட்ட நபர்களும் தெரியப்படுத்தலாம் என்றும் உரிய நடவடிக்கை துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதி கொடுத்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications