அமலாக்கத்துறைக்கு அஞ்சும் அன்புமணி.. சென்னையில் வீராவேசம்! டெல்லியில் அடிமை - விளாசிய எம்.ஆர்.கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்­னை­யில் 'வீரா­வே­சம்' செய்­யும் பாமக தலைவர் அன்புமணி ராம­தாஸ் டெல்­லி­யில் கை கட்டி நின்று மத்திய அர­சுக்கு அடிமையாக இருப்­பது ஏன்? என அமைச்­சர் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது­கு­றித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "என்.எல்.சி. விரி­வாக்­கத் திட்­டத்தை கைவி­டும் எண்­ணம் இல்லை" என ஒன்­றிய நிலக்­க­ரித்­துறை அமைச்­சர் பிர­க­லாத் ஜோசி மாநி­லங்­க­ள­வை­யில் அறி­வித்­தி­ருக்­கி­றார். அது­வும், பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் எம்.பி.கேட்ட கேள்­விக்கு அவ்­வாறு எழுத்­துப்­பூர்­வ­மான பதிலை தெரிவித்துள்ளார்.

Minister MRK Panneerselavam questions Anbumani on NLC Issue

என்.எல்.சி. விவ­கா­ரத்­தைப் பொறுத்­த­வரை, அந்த உழ­வர்­களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதி­க­ரிப்­ப­தாக இருக்­கட்­டும், உள்­ளூர் பகுதி மக்­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்­கு­வ­தாக இருக்­கட்­டும், அனைத்­தி­லும் எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போது ஆணித்­த­ர­மா­கக் குரல் எழுப்­பி­யது திராவிட முன்­னேற்­றக் கழ­கம்­தான்.

இப்­போது ஆட்­சிப் பொறுப்­பேற்ற பிறகு, என்.எல்.சி. நிர்­வா­கத்­து­டன், ஒன்றிய அமைச்­சர்­க­ளு­டன் பல்­வேறு சுற்­றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இழப்­பீட்­டுத் தொகையை உயர்த்­திக் கொடுக்க வைத்­த­தும் கழக அர­சு­தான். கடந்த காலங்­க­ளில் வழங்­கப்­பட்ட இழப்­பீட்டை விட அதி­க­மாக இழப்­பீடு வழங்­கி­யது மட்­டு­மன்றி, ஏற்­க­னவே இழப்­பீடு பெற்றவர்களுக்குக் கூடமேலும் கூடு­தல் தொகை பெற்­றுத் தந்த அரசு திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சு­தான். எங்­க­ளின் தள­பதி முதலமைச்சர்தான்.

இன்­னும் கூட, உழ­வர்­­­­­களின் உரி­மை­க­ளுக்­காக, அவர்­க­ளின் வாழ்வாதாரத்துக்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்திட வேண்­டும் என்று அந்த மாவட்­டத்­தின் அமைச்­சர் என்ற முறையில் முன்­னின்று, உழ­வர்­க­ளு­டன் அவர்­க­ளின் நலன்களுக்­காக பேச்சுவார்த்தை நடத்தி, இந்த அர­சின் நட­வ­டிக்­கை­கள் மீதும், எங்­கள் கழகத் தலை­வ­ரான முத­ல­மைச்­சர் மீதும் உழ­வர்­கள், இளை­ஞர்­கள் நம்பிக்கையாக இருக்­கி­றார்­கள்.

இதைப் பொறுத்­துக் கொள்ள முடி­யாத அன்­பு­மணி ராம­தாஸ் போராட்­டம் என்ற பெய­ரில் போலீ­சார் மீது கல்­வீசி, பொதுச் சொத்­து­களை வழக்­கம் போல் சேதப்­ப­டுத்தி, அமை­தி­யாக இருக்­கும் உழ­வர்­களை - மக்­க­ளைத் தூண்டி­ விட்டு இந்த அர­சுக்கு எதி­ராக ஒரு சதித் திட்­டத்தை உரு­வாக்கி வரு­கி­றார். வட மாவட்­டங்­க­ளில் உள்ள உழ­வர்­கள், மக்­க­ளுக்­குக் கிடைக்கும் மின்­சா­ரத்­தைத் துண்­டித்து, எப்­ப­டி­யா­வது இந்த மாவட்டங்களை, மாவட்­டங்­க­ளின் முன்­னேற்­றத்தை இருட்­டில் தள்ளி விட முடி­யாதா என்று துடிக்­கி­றார்.

ஓரி­டத்­தில், "மண்­ணை­யும் மக்­க­ளை­யும் காக்க எந்த எல்­லைக்­கும் செல்வோம்"என­வும், இன்­னொரு இடத்­தில்,"நாங்­கள் டெல்லி அள­வில் மட்டுமே தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யில் இருக்­கி­றோம். தமிழ்­நாட்­டில் இல்லை" என்­றும் நாட­க­மா­டு­வது என்­ப­தைக் கை வந்த கலை­யாக செய்து வரு­கிறார் அன்­பு­மணி ராம­தாஸ்.

சென்­னை­யில் "வீரா­வே­சம்" செய்­யும் அன்­பு­மணி ராம­தாஸ், டெல்­லி­யில் கைகட்டி நின்று ஒன்­றிய அர­சுக்கு அடி­மை­யாக இருப்­பது ஏன்? டெல்லி நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்ள மருத்­து­வக் கல்­லூரி வழக்கா? அல்­லது அந்த நிலு­வை­யில் உள்ள வழக்கை வைத்து அம­லாக்­கத்­துறை கைது செய்­து­வி­டப் போகி­றது என்ற கலக்­கமா?

இங்கே "மண்­ணை­யும், மக்­க­ளை­யும் காப்­போம்" என்­ற­வர் டெல்­லி­யில் முகத்­திற்கு நேராக, "என்.எல்.சி. விரி­வாக்­கத் திட்­டத்­தைக் கைவிடமாட்டோம் " என்று ஒன்­றிய பா.ஜ.க. அமைச்­சர், அது­வும் அன்புமணி ராம­தாசே விரும்பி இடம்­பெற்­றுள்ள "டெல்லி தேசிய ஜனநாயக கூட்­ட­ணி­யின்"அமைச்­சர் அறி­வித்த பிற­கும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநி­லங்­க­ளவை­யில் தெரி­வித்த பிற­கும், பெட்­டிப் பாம்பு போல் அடங்கி கிடப்­பது ஏன்?

தைரி­யம் இருந்­தி­ருந்­தால், அவர் சென்­னை­யில் பேசு­வ­தும் - போராடுவதும் உண்மை­யென்­றால், குறைந்­த­பட்­சம் மாநி­லங்­க­ள­வை­யில் இருந்து வெளிநடப்பாவது செய்­தி­ருக்க வேண்­டாமா? அதி­க­பட்­ச­மாக "இனி நாங்கள் டெல்லி அள­வில் உள்ள தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி­யி­லும் இல்லை" என்றுஅறி­வித்­து­விட்டுவிமா­னம் ஏறிச் சென்­னைக்கு வந்­தி­ருக்க வேண்­டாமா?

அப்­ப­டி­யெல்­லாம் அன்­பு­மணி ராம­தாஸ் அவ­ச­ரப்­ப­ட­மாட்­டார் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்­றால் அப்­படி அவ­ச­ரப்­பட்­டால் மருத்­து­வக் கல்­லூரி முறை­கேடு வழக்­கில் அம­லாக்­கத்­துறை வந்து தன் வீட்­டுக் கதவை தட்­டும் என்­பது அவ­ருக்­குத் தெரி­யும். அத­னால்­தான் மாநிலங்களவையில் ஒன்­றிய அமைச்­சர் "கைவி­ரித்­தும்" இவ­ரால் அது பற்றி கைதூக்கி கேள்வி எழுப்ப முடி­யா­மல் அமை­தி­யாகி விட்­டார்.

ஆகவே திரு­வா­ளர் அன்­பு­மணி ராம­தாஸ் அவர்­களே, வட மாவட்ட மக்களின் நல­னுக்­கும், உழ­வர்­­களின் உரி­மை­க­ளுக்­கா­க­வும் எங்­கள் முதலமைச்சர் அவர்­கள் ஓயாது உழைக்­கி­றார். ஒன்­றிய அர­சு­டன் போராடி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றார். இன்­னும் மாநில அர­சின் அதி­கா­ரத்­தைப் பயன்ப­டுத்தி இந்த மண்­ணை­யும், மக்­க­ளை­யும் காக்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுப்­பார் என்று நம்­பி­யி­ருக்­கும் உழவர்களை, வட மாவட்ட மக்­களை உங்­க­ளின் இது போன்ற "கபட நாடகன்கள்" மூலம் திசை ­தி­ருப்பி விட முடி­யாது என்று தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+