தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை! உரக்கடைகள் வேண்டாத வேலையை பார்க்கக் கூடாது! அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை: உரங்களை பதுக்கியும், அதிக விலைக்கு விற்பனையும் செய்யும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார்.
உர இருப்பு, விநியோகம் தொடர்பாக புகார் ஏதும் இருந்தால், விவசாயிகள் 93634 40360 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ரசாயன உரங்கள்
விவசாயிகளுக்கு இரசாயன உரங்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் வழங்கிய உத்தரவின்படி, இரசாயன உரங்களை ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி பெற்று, விவசாயிகளுக்கு தொடர்ந்து விநியோகம் செய்திட வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசுக்கு புகார்
மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பதுக்கல் செய்தாலோ, சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அனைத்து உரக்கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் உரங்களை அதிக விலைக்கு விற்பதாகவும், உரங்களுடன் விவசாயிகள் கேட்காத இதர இடுபொருட்களையும் சேர்த்து விற்பதாகவும் உரங்களை பதுக்கி வைப்பதாகவும் அரசுக்கு செய்திகள் வந்தன. உடனடியாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மேற்கொண்டது போல், தற்போதும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

6,949 இடங்களில் ஆய்வு
அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களைக் கொண்டு, 374 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக 514 மொத்த உர விற்பனைக்கடைகள், 6,258 கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை உர விற்பனை மையங்கள், 106 உர இருப்பு கிடங்குகள், 38 கலப்பு உர உற்பத்தி நிறுவனங்கள், 16 மாவட்ட சோதனைச் சாவடிகள், 17 தொழிற்சாலைகள் ஆக மொத்தம் 6,949 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

விதி மீறல்கள்
திடீர் ஆய்வில், 195 உரக்கடைகளில் இருப்பு தகவல் பலகையின்றி உரவிற்பனை செய்தது, 70 உரக்கடைகளில் புத்தக இருப்புக்கும் உண்மை இருப்புக்கும் வித்தியாசம் இருந்தது, 36 கடைகளில் அனுமதி பெறாமல் உர விற்பனையில் ஈடுபட்டது, விற்பனை முனையக்கருவி (POS)-யில் பட்டியலிடாமல் விற்பனை செய்தது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

நடவடிக்கைகள்
உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி, விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு உரக்கடைகளின் விற்பனை உரிமம் நிரந்தரமாகவும், 92 உரக்கடைகளின் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 266 உரக்கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன.
யூரியா 65,300 டன்னும், டிஏபி 42,000 டன்னும், பொட்டாஷ் 30,200 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,55,200 டன்னும் ஆக மொத்தம் 2,92,700 டன் உரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

93634 40360
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குத் தேவையான உரங்களுக்கான ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசிடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதுடன், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரங்கள் சீராக விநியோகம் செய்வதையும் அரசு கண்காணித்து வருகிறது. உர இருப்பு, விநியோகம் தொடர்பாக புகார் ஏதும் இருந்தால், விவசாயிகள் 93634 40360 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அமைச்சர் எச்சரிக்கை
எனவே, அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-க்கு எதிராக, விதிமீறலில் ஈடுபடும் உரக்கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் எச்சரித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications