அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறை.. அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தில் இனி அனுமதி வழங்க உள்ளோம் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
தமிழக சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, துறையின் அமைச்சர் முத்துசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு:

வாகன நிறுத்தமிடம்
தமிழகத்தில் 2,500 சதுர அடி மனையிடத்தில் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி தற்பது வழங்கப்படுகிறது. வாகனம் நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின் அனுமதி இனி வழங்க உள்ளோம்.
கட்டிட வரைபட அனுமதி
குடியிருப்பு கட்டிடங்களுக்கான நிலையான மனை அளவுகள் கொண்ட மாதிரி கட்டிட வரைபடங்கள், முகப்பு தோற்றம் மற்றும் குறுக்கு வெட்டு தோற்ற விவரங்களுடன் பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் உருவாக்க வழிவகை செய்யப்படும்.
சுயசான்றிதழ் அனுமதி
குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி பெறும் சுயசான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலைகளுக்கான கட்டிட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்த உள்ளோம். இதன் மூலம், சிறிய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் இணையதளம் வாயிலாக பதிவு செய்து சுயசான்றிதழ் மூலம் 500 சதுர மீட்டருக்குள் (5,382 சதுரஅடி) கட்டப்படும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு உடனடியாக அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கிராம தொழிற்சாலை பாதைகள்
மேலும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் அமையும் இந்த வகை தொழிற்சாலை கட்டிடங்களுக்கு தேவைப்படும் குறைந்தபட்ச அணுகுபாதை அகலம் 7 மீட்டரில் இருந்து 6 மீட்டராக குறைக்கப்பட உள்ளது. வரிசை வீடுகள் மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு பக்கத்திறவிடம் தளர்வு போன்ற சிறப்பு விதிகள் சேர்க்கப்படும்.
அனுமதியற்ற மனைப்பிரிவு
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்பட உள்ளது.
பள்ளி கட்டிடம்
நீர்நிலைக்கு அடுத்துள்ள பள்ளி கட்டிங்களுக்கு நீர்நிலைப் பக்கத்தில் எந்த திறப்புகளும் இல்லாத வகையில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால், நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்படும். அதேபோல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு, பள்ளி நிர்வாகமே சேவை சாலை உருவாக்கினால் அந்த பள்ளி கட்டிங்களுக்கு நடைமுறையிலுள்ள விதிகளை பின்பற்றி அனுமதி வழங்கப்படும்.
தனி வாகன நிறுத்தக் கொள்கை
உள்கட்டமைப்பு மற்றும் வசதி கட்டணங்கள், வளர்ச்சி கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு 30 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட உள்ளது. ஒற்றை குடியிருப்பு கொண்ட தனி வீட்டிற்கு வாகன நிறுத்துமிடத்திற்கென தனி விதிகள் உருவாக்கப்படும். திட்ட ஒப்புதல் வழங்கும் நடைமுறையில், பொதுமக்களுக்கு உதவிபுரிய தற்போது செயல்பாட்டில் உள்ள ஒற்றைசாளர முறையில் மின்னணு உதவி செயலி உருவாக்கப்படும்.
மாஸ்டர் பிளான்
நகர் ஊரமைப்புத்துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் பதிவுபெற்ற வல்லுனர்கள் நகர் ஊரமைப்பு துறையில் செயல்பட அனுமதிக்கப்படுவர். நகர் ஊரமைப்பு துறையில் முழுமைத்திட்ட அலகு (தனிபிரிவு) உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முழுமைத்திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரித்து செயல்படுத்துவதற்கான நிலையான செயல்முறை தயாரிக்கப்படும்" இவ்வாறு முத்துச்சாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications