Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆர் தோற்றத்தில் விஜய்.. அப்படி போகாதவரை எந்த பிரச்சினையும் இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை : எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து தெரிவிக்க முடியாது. எனினும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை தங்களுக்கு தான் உள்ளது என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்,

Recommended Video

    எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது - அமைச்சர் மாபா பாண்டியராஜன்

    திருவேற்காடு நகராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார்.

    மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் இரண்டு பூங்காக்களை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ் வளர்ச்சி பொருத்தவரை தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக அரசு ஏராளமான விஷயம் செய்து வருகிறோம். மத்திய அரசு உதவி என்று இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

    அதிமுகவுக்கு பொருந்தாது

    அதிமுகவுக்கு பொருந்தாது

    முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது திமுக ஆட்சிக்கு பொருந்தும், அதிமுக ஆட்சிக்கு பொருந்தாது. வரும் தேர்தலில் சாதனைகளின் அடிப்படையில் வாக்குகள் கேட்கப் போகிறோம்.

    மெத்தனம் கூடாது

    மெத்தனம் கூடாது

    நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை. நாம் மெத்தனமாக இருந்து விட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

    ரசிகர்களின் விருப்பம்

    ரசிகர்களின் விருப்பம்

    எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டிய போஸ்டர் குறித்து கேட்கிறீர்கள். அது ரசிகர்களின் விருப்பம். அதில் நான் கருத்து சொல்ல முடியாது.
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வைத்துள்ளார்கள். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன்.

    எங்களுக்கே உரிமை

    எங்களுக்கே உரிமை

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எந்த பிரச்சினையும் இல்லை, அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். பேட்டியின்போது உடன் நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+