தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆப்பு? டெல்லிக்குப் பறந்த பரபர புகார்!
சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி இந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக அவரது துணை பொது செயலாளர் பதவி திமுக தலைவர் ஸ்டாலினால் பறிக்கப்பட்டது. தனது பேச்சுக்கு பொன்முடி வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு திமுக தலைமையையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார்." என பேசினார்.

மேலும், சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன? என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார். இதனால் அவர் பேச்சு சர்ச்சையான நிலையில், கனிமொழி எம்பி உள்ளிட்ட சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கிடையே அமைச்சர் பொன்முடியை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசியவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் பொன்முடி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள்அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துவிட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது .முன்னதாக பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பொன்முடி மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதேபோல ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது.
அமைச்சரின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பாஜக, அதிமுக ஆகியவையும் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவர் மீது வழக்குப் பதிய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மாநில, தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக வழக்கறிஞரான மணி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறார்.
ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ள பொன்முடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. மகளிர் ஆணையம் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்தார். அதற்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர் விமர்சனங்கள் வருவதால் தற்காலிக ஏற்பாடாக பொன்முடியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications