தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆப்பு? டெல்லிக்குப் பறந்த பரபர புகார்!
சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி இந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக அவரது துணை பொது செயலாளர் பதவி திமுக தலைவர் ஸ்டாலினால் பறிக்கப்பட்டது. தனது பேச்சுக்கு பொன்முடி வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு திமுக தலைமையையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார்." என பேசினார்.

மேலும், சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன? என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார். இதனால் அவர் பேச்சு சர்ச்சையான நிலையில், கனிமொழி எம்பி உள்ளிட்ட சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கிடையே அமைச்சர் பொன்முடியை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசியவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் பொன்முடி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள்அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துவிட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது .முன்னதாக பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பொன்முடி மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதேபோல ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது.
அமைச்சரின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பாஜக, அதிமுக ஆகியவையும் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவர் மீது வழக்குப் பதிய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மாநில, தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக வழக்கறிஞரான மணி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறார்.
ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ள பொன்முடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. மகளிர் ஆணையம் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்தார். அதற்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர் விமர்சனங்கள் வருவதால் தற்காலிக ஏற்பாடாக பொன்முடியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே! -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
தேசிய அரசியலில் ஸ்டாலின் 'ரைசிங்'.. கோவப்பட்ட மம்தா? ராகுலின் மௌன யுத்தம்.. பின்னணி என்ன? -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்! -
"பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உடன்பாடு இருக்கிறது.." மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications