Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திணற திணற விசாரிக்கும் ED.. அமைச்சர் பொன்முடி மகன் கௌதமசிகாமணியிடம் இன்று காலை முதல் கிடுக்கிப்பிடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் விசாரணைக்கு ஆஜரானார். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவுதம சிகாமணியிடம் காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய காவல் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீடு, அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள வீடு, பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

Minister Ponmudis son Gautham Sigamani appears before Enforcement directorate for inquiry

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு: செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சட்ட விரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது என கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த ரெய்டை மேற்கொண்டது.

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.81.70 லட்சம் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரூ.13 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் பவுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் விசாரணை: 13 மணி நேர ரெய்டுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாலை 3 மணிக்கு மேல் தான் அமைச்சர் பொன்முடி வீட்டுக்குச் சென்றார்.

மறுபடியும் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் கொடுத்தது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரிடம் நேற்று மாலை முதல் சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அமைச்சர் மகனிடம் இன்றும் விசாரணை: இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற எம்.பி.யுமான கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத செம்மண் குவாரி மூலமாக வந்த வருவாய் வெளிநாட்டில் முதலீடு செய்யப்ப்பட்டுள்ளதா, எந்தெந்த வகையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் கவுதம சிகாமணியிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் கௌதம சிகாமணிக்குச் சொந்தமான ரூ.8.6 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பொன்முடி இன்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று முதல்வரைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. அப்போது, அமலாக்கத்துறையினரின் விசாரணை தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் மகன் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+