கைரேகை வைக்கலனா ரேஷன் கார்டு ரத்து? சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி அளித்த விளக்கம்! தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என தகவல் பரவி வந்த நிலையில், சட்டசபையில் இன்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு வந்து கட்டாயம் கைரேகை வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2.5 கோடி குடும்ப அட்டைகளில் 1 கோடிக்கும் அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டை தாரர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் தமது கைவிரல் ரேகையை பயோமெட்ரிக் மிஷினில் வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் தகவல் பரவி வருவதால் மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ சின்னதுரை இதுதொடர்பாக கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது, தொடர்ந்து அனைத்து பொருட்களும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 45% மக்கள் தங்களது கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். இனி வரும் நாட்களில் வீடுகளுக்கே சென்று கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications