அசத்துதே அரசு.. புதிய ரேஷன் கார்டு + அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
திண்டுக்கல்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது என தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் மற்றும் கரியாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் சக்கரபாணி
அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஒரு சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். இம்முகாமில் 15 துறைகள் சார்பாக 46 சேவைகள் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அனைத்து துறை அலுவலர்களும் இங்கு வந்துள்ளார்கள். இப்படிப்பட்ட திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் 15.07.2025 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளது. தற்போது வரை 5,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளிமந்தையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் மனுக்கள் கொடுத்தல் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 300 முகாம்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்து, 150-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீதமுள்ள முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவு வழங்கி உள்ளார்.
தாயுமானவர் திட்டம்
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை, பாமாயில் கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்துள்ளார்கள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 20 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2023 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 52 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications