அன்புமணிக்கு ஜீரோ மார்க்.. அப்பா அம்மாவையே மதிக்காத.. போட்டு தாக்கிய சேகர் பாபு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே ஏற்பட்டு வரும் மோதல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி பாஜகவுடன் நெருக்கமாகவும், திமுக மீது தொடர்ந்து விமர்சனமும் வைத்து வருகிறார். அவருக்கு பதில் சொல்லியுள்ள அமைச்சர் சேகர் பாபு அன்புமணிக்கு ஜீரோ மார்க் என்று கூறியதுடன், அவரை கடுமையாக விமர்சித்து தள்ளியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் முடிக்காமல் திறக்கவில்லை. திறந்த பிறகு கூடுதல் வசதிகள் செய்துத்தரப்பட்டன. சில ஊடகங்கள் தான் அதை விமர்சித்தன. சில ஊடகங்கள் அதை உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டின. எந்த குறையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகிறோம்.

மழை முன்னெச்சரிக்கை பணி
பண்டிகை காலங்களில் ராயபுரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தை இரண்டாக பிரித்து, தீவுத்திடலில் ஒரு பகுதியாக பிரித்துள்ளோம். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணிகள் எளிதாக பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.800 கோடி நிதியில் பிராட்வே பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளது.
வட சென்னையில் ஏற்கனவே நடைபெற்று வரும் கணேசபுரம், ஆர்கேநகர் பாலம் பணிகளையும் ஆய்வு செய்துள்ளோம். முதலமைச்சர் கண்காணிப்பில் அந்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர்கால அடிப்படையில் பருவமழையை சந்திக்க தயாராக உள்ளோம். உணவு, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் தேவைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஆய்வு செய்துள்ளோம்.
தேர்தல் வாக்குறுதி
சென்னை பெருநகர மாநகராட்சி மேயர், அதிகாரிகள் பலகட்டங்களாக ஆய்வு செய்து பட்டியல் எடுத்துள்ளனர். கடந்த முறை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், இந்தமுறை பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மாதம் 22 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் மழை வெள்ள தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக நிதியமைச்சர் விளக்கமளித்துவிட்டார். வாக்குறுதிகளுடன் மக்களுக்கு தேவையான பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். தேர்தல் அறிக்கையில் வந்ததை விட 50க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இதன்மூலம் ஒன்றியத்திலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் பணிக்கு உதவியாக இருப்பதுதான் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு தகுதி.
அட்டாக் அன்புமணி
எந்த தகுதியும் இல்லாத அவர் கூறும் புகார்களை கேட்பது ஏற்படையதல்ல. அன்புமணிக்கு மதிப்பெண் கொடுக்க வேண்டுமென்றால் ஜீரோ மதிப்பெண் தான் கொடுக்க வேண்டும். தூங்குவோரை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த உலகத்திற்கு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களை மதிக்க தெரியாதவர்களின் மதிப்பெண்ணை எல்லாம் நாங்கள் மதிக்க மாட்டோம்." என்றார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications