கோட்டைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின்... உற்சாகம் பொங்க வரவேற்ற அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக தலைமைச் செயலகம் சென்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் செங்கோட்டையன் உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார்.
கொரோனா பதற்றம் தணிந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தக்கோரி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி ஆகியோர் அவருடன் உடன் சென்றனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்திக்க உதயநிதி தரப்பில் இருந்து நேற்று நேரம் கேட்கப்பட்டுள்ளது. எந்த மறுப்பும் தெரிவிக்காத அமைச்சர் செங்கோட்டையன் இன்று பிற்பகல் 3 மணிக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். அதன் பேரில் அவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்த உதயநிதியை, செங்கோட்டையன் இன் முகத்துடன் வரவேற்று அவரது கோரிக்கைகளை கவனமாக கேட்டுக்கொண்டார்.
மேலும், தன்னை சந்திக்க வந்த விருந்தாளியான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு காஃபி, ஸ்வீட், பழங்கள் உள்ளிட்ட ஸ்நாக்ஸ்களை வரவழைத்து கொடுத்துள்ளார். ஆனால், அதை எதையும் சாப்பிடாத உதயநிதி ஸ்டாலின் தங்கள் கோரிக்கை குறித்து பரிசீலித்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்தால் மட்டும் போதும் என கூறியிருக்கிறார்.
ஒரு 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள், முதலமைச்சரிடம் பேசிவிட்டு சொல்கிறேன், எனத் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், உதயநிதியை காஃபியாவது குடிக்குமாறு கூறியுள்ளார். புன்னகையுடன் அதனை மறுத்த உதயநிதி, சுமார் 10 நிமிட சந்திப்பை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டார்.
உதயநிதியை பொறுத்தவரை பேசுவதை விட செயல்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என அடிக்கடி நிர்வாகிகள் மத்தியில் கூறுவார். அந்த வகையில் பத்தாம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் வெறுமனே ஆலோசனையை நடத்தி அத்தோடு அந்த விவகாரத்தை முடித்துவிடாமல், களத்தில் இறங்கியிருப்பதை கட்சியின் சீனியர்கள் சிலரே வியப்போடு பார்க்கின்றனர்.
அண்மையில் எதிர்க்கட்சிக்கு உரிய மரியாதையை தலைமைச் செயலாளர் தரவில்லை என திமுக எம்.பி.க்கள் புகார் கூறிய நிலையில், இன்று திமுக பிரதிநிதிகளை கண்ணியமாக வரவேற்று அவர்களின் கோரிக்கை மனுவை அமைச்சர் செங்கோட்டையன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications