Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டக்.. டக்குன்னு அனுமதி! கடனுக்கு தமிழக அரசு கேரண்டி! தொழில்முனைவோர்களாக 16,746 இளைஞர்கள்! -அன்பரசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 20 மாதங்களில் மட்டும் 16,746 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர் என சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு, தேவையான கடன் உத்தரவாதத்தினை தமிழக அரசே வழங்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் ஸ்டாலினால் ரூ. 100 கோடி நிதியில் "தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்" துவக்கி வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

உலக தமிழ் வம்சாவளி மாநாட்டில் அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியதாவது;

MSME துறை

MSME துறை

நமது நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக MSME துறை விளங்குகிறது.பணமதிப்பிழப்பு, GST, கொரோனா ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு துவண்டு இருந்த MSME துறையை தன் சீரிய திட்டங்களால் தூக்கி நிறுத்திய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும். இந்திய அளவில் தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Start-up நிறுவனங்கள்

Start-up நிறுவனங்கள்

Start-up நிறுவனங்கள் தர வரிசை பட்டியலில் 5-வது நிலையிலிருந்து தமிழகம் இன்று 3-ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில், 7 லட்சத்து 7 ஆயிரம் 681 பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் மூலம், 64 லட்சத்து 48 ஆரியம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 8 ஆயிரம் வகையான பொருட்களை உற்பத்தி செய்து MSME துறையில் இந்திய அளவில் தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது.

14,651 விண்ணப்பங்கள்

14,651 விண்ணப்பங்கள்

தமிழக அரசு MSME தொழில்களுக்கு பல புதிய திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெற கடந்த ஆண்டு Single Window Portal 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 40 அரசு துறைகள் வழங்கும் 142 வகையான சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலமாக 14,651 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 12,900 தொழில்முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 16,746 படித்த இளைஞர்கள்

16,746 படித்த இளைஞர்கள்

சிறு, குறு - நடுத்தர தொழில்கள், வியாபார நிறுவனங்களின் வளர்ச்சிக்காக , தமிழக அரசின் MSME துறையின் மூலம் NEEDS - UYEGP - PMEGP ஆகிய 3 வகையான மானியத்துடன் கூடிய சுய தொழில் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.இந்த 3 வகையான திட்டங்களின் கீழ், ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், ரூ.586 கோடி மானியத்துடன், ரூ. 2 ஆயிரத்து 343 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 16,746 படித்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடன் உத்திரவாத திட்டம்

கடன் உத்திரவாத திட்டம்

தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு, தேவையான கடன் உத்தரவாதத்தினை தமிழக அரசே வழங்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ரூ. 100 கோடி நிதியில் "தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்" துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ. 40 லட்சத்திற்கு குறைவான வங்கிக்கடனுக்கு 90% உத்திரவாதமும், ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு 80 சதவீதம் உத்திரவாத்தினையும் தமிழக அரசு வழங்கும். இந்தியாவிலேயே 90% வரை கடன் உத்திரவாதம் வழங்க உள்ள ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+