ஸ்டாலினை டிடிவி தினகரன் விமர்சனம் செய்யாதது ஏன்? அமைச்சர் உதயகுமாருக்கு வந்த சந்தேகம்
Recommended Video
சென்னை: தினகரன் நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறார். ஸ்டாலின் தினகரன் இடையேயான உறவு காலத்தினால் கட்டவிழ்க்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, பேரிடர் உதவிப்படை என்ற அமைப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று கலைவாணர் அரங்கத்தில் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்பு பணிகள் குறித்த 4 ஆய்வுக் கூட்டங்கள் கடந்த ஒருமாத காலமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
[ லேட்டா வந்தாலும் வெற்றிதான் முக்கியம்.. ரஜினி பரபரப்பு பேச்சு ]
மேலும் அவர் கூறியதாவது: முதல் நிலை மீட்பாளர்கள் எப்பொழுதுமே தயாராக உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு துறை உள்ளிட்ட சிறப்பு படைகள் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், எதிர் கட்சியினர் விளம்பரத்திற்காக பொய் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
மழை காலங்களில் மக்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மழைக்காலங்களில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு 4 மணி நேரம் செலவிட்டு அனைத்து ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஸ்டாலின் மீது கண்டன அறிக்கையோ விமர்சனமோ செய்யாதது ஏன்? ஸ்டாலினை பார்த்து தினகரன் பயப்படுகிறாரா?.
தினகரன் சுயநலத்திற்காக பலரது எம்.எல்.ஏ. பதவியை இழக்க வைத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் திமுக. இவர்களுடன் தினகரன் வைத்துள்ள உறவு கூட்டணிக்கான முயற்சியா? தினகரன்-ஸ்டாலின் உறவு காலத்தினால் கட்டவிழ்க்கப்படும்.
மதுரையில் தேவர் ஜெயந்தி அன்று தேவர் மற்றும் ஜெயலலிதாவின் பேனர்களை கிழித்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளது. ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் தைரியமாக இது போன்ற செயலில் தினகரன் ஈடுபடுகிறார். நிழல் யுத்தத்தை தினகரன் நடத்தி வருகிறார், வன்முறையை அ.தி.மு.க என்றும் விரும்பாது.