மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மோடி பற்றிய கேள்விக்கு, "ஜூன் 4ஆம் தேதி பேசுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அமைச்சரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகா உதயதிநிதோடு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தனது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்த பின்னர் வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "எனது ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றியுள்ளேன். மாலை 6 மணி நேரம் உள்ளது. தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். யார் சரியான ஆட்சியாளர்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள் மோடி பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியதுமே, அவசரமாக மறுத்த உதயநிதி ஸ்டாலின் கைகூப்பியபடி, "அதெல்லாம் வேண்டாம்.. பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4 ஆம் தேதி பேசிக் கொள்வோம்" எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இதைத் தொடர்ந்து, காரில் புறப்படுகையில் ANI செய்தி நிறுவனத்துக்கு ஆங்கிலத்தில் பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த தேர்தலில் திமுக, இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications