தலைக்கேறிய உல்லாசம்.. மிஸ்ஸிங் ஏடிஎம் கார்டுகள்.. ஸ்வைப் மிஷினும் இல்லை.. இப்படியும் நடக்குமா?
சென்னை: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வார்கள்.. இதோ இப்படியும் நூதன திருட்டு நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன். இவருடைய ஏடிஎம் கார்டு திடீரென்று தொலைந்துவிட்டது.. பிறகு வங்கிக்கணக்கிலிருந்து, 3 தவணைகளாக 12,000 ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் பதறிப்போன கார்த்திக் வேந்தன், சூளைமேடு போலீசுக்கு சென்று புகார் தந்தார்.

புகார்கள்: போலீசாரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உடனே சூளைமேடு போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அரும்பாக்கம் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருக்கும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏடிஎம் வாசலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றி திரிவதாக சூளைமேடு போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்றனர்.. சந்தேகத்திற்கிடமாக சுற்றிவந்த நபரை கைது செய்தனர்.

ஆந்திரா: ஸ்ரீவாசலு ரெட்டி என்ற 27 வயது நபர் சிக்கினார்.. இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பகுதியை சேர்ந்த ஸ்ரீவாசலு, ஆந்திராவிலேயே என்ஜினியரிங் படித்தவிட்டு, அம்மாநில தனியார் வாங்கி ஒன்றில் டேட்டா ஆப்ரேட்டராக ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார்.
அப்போது ஏடிஎம் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும், அதிலிருந்து எந்தெந்த வழிகளில் பணம் எடுக்கலாம் என்பது குறித்தெல்லாம் நுணுக்கங்களை தெரிந்து கொண்டுள்ளார்.. பிறகு, அந்த பேங்க் வேலையை உதறித்தள்ளிவிட்டு, ஏடிஎம் மையங்களில் கஸ்டமர்கள் தவறவிடும் கார்டுகளை திருடி, அதன்மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.

வைஃபை கார்டுகள்: குறிப்பாக, வைஃபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து ஸ்ரீவாசலு திருடியிருக்கிறார்.. அந்த கார்டுகளை, ஸ்வைப் மெஷின் இல்லாமல் டேப் செய்து பணத்தையும் அள்ளியிருக்கிறார்..
இப்படியே திருடி திருடி, சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அதாவது மொத்தமாக பணத்தை திருடமாட்டாராம்.. முதலில் 2000 ரூபா முதல் 5000 ரூபாய் வரை சிறுக சிறுக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி: சென்னை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஏடிஎம் கார்டுகளை திருடி பணத்தை கொள்ளை அடித்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இப்போது ஸ்ரீவாசலுவிடமிருந்து மொத்தம் 63 வைஃபை ஏடிஎம் கார்டுகள், லேப்டாப்கள, செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த படித்த மேதாவி ஸ்ரீவாசலு மீது ஹைதராபாத்தில் மட்டுமே 11 கேஸ்கள் இருக்கிறதாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications