தலைக்கேறிய உல்லாசம்.. மிஸ்ஸிங் ஏடிஎம் கார்டுகள்.. ஸ்வைப் மிஷினும் இல்லை.. இப்படியும் நடக்குமா?
சென்னை: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கவே செய்வார்கள்.. இதோ இப்படியும் நூதன திருட்டு நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன். இவருடைய ஏடிஎம் கார்டு திடீரென்று தொலைந்துவிட்டது.. பிறகு வங்கிக்கணக்கிலிருந்து, 3 தவணைகளாக 12,000 ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் பதறிப்போன கார்த்திக் வேந்தன், சூளைமேடு போலீசுக்கு சென்று புகார் தந்தார்.

புகார்கள்: போலீசாரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உடனே சூளைமேடு போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அரும்பாக்கம் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருக்கும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏடிஎம் வாசலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றி திரிவதாக சூளைமேடு போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்றனர்.. சந்தேகத்திற்கிடமாக சுற்றிவந்த நபரை கைது செய்தனர்.

ஆந்திரா: ஸ்ரீவாசலு ரெட்டி என்ற 27 வயது நபர் சிக்கினார்.. இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பகுதியை சேர்ந்த ஸ்ரீவாசலு, ஆந்திராவிலேயே என்ஜினியரிங் படித்தவிட்டு, அம்மாநில தனியார் வாங்கி ஒன்றில் டேட்டா ஆப்ரேட்டராக ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார்.
அப்போது ஏடிஎம் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும், அதிலிருந்து எந்தெந்த வழிகளில் பணம் எடுக்கலாம் என்பது குறித்தெல்லாம் நுணுக்கங்களை தெரிந்து கொண்டுள்ளார்.. பிறகு, அந்த பேங்க் வேலையை உதறித்தள்ளிவிட்டு, ஏடிஎம் மையங்களில் கஸ்டமர்கள் தவறவிடும் கார்டுகளை திருடி, அதன்மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.

வைஃபை கார்டுகள்: குறிப்பாக, வைஃபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து ஸ்ரீவாசலு திருடியிருக்கிறார்.. அந்த கார்டுகளை, ஸ்வைப் மெஷின் இல்லாமல் டேப் செய்து பணத்தையும் அள்ளியிருக்கிறார்..
இப்படியே திருடி திருடி, சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அதாவது மொத்தமாக பணத்தை திருடமாட்டாராம்.. முதலில் 2000 ரூபா முதல் 5000 ரூபாய் வரை சிறுக சிறுக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி: சென்னை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஏடிஎம் கார்டுகளை திருடி பணத்தை கொள்ளை அடித்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இப்போது ஸ்ரீவாசலுவிடமிருந்து மொத்தம் 63 வைஃபை ஏடிஎம் கார்டுகள், லேப்டாப்கள, செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த படித்த மேதாவி ஸ்ரீவாசலு மீது ஹைதராபாத்தில் மட்டுமே 11 கேஸ்கள் இருக்கிறதாம்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications