ஆறாத கோபக் கனல்.. கூட்டணி உறுதிதான்.. ஆனால் ராகுல் காந்தி மீது செம கடுப்பில் திமுக தலைகள்.. ஏன்?
சென்னை: அறிவாலயத்தின் ஒவ்வொரு அறையிலும் இப்போது எதிரொலிக்கும் ஒரே பெயர்.. ராகுல் காந்தி. ஆனால், அது 2019-ல் ஸ்டாலின் முழங்கிய "வருக ராகுலே, தருக நல்லாட்சி" என்ற பாச முழக்கம் அல்ல; மாறாக, கூட்டணியின் கடைசி நிமிடம் வரை இழுத்தடித்த "டெல்லி தர்பார்" மீதான காட்டமான கோபம்!
"கூட்டணி உறுதியாகிவிட்டது, ஆனால் கசப்பு இன்னும் மிஞ்சியிருக்கிறது."

1. ஏறி நின்ற 'கை'... திகைத்துப்போன அறிவாலயம்!
தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணி தள்ளாடிக்கொண்டிருந்த போதும், தமிழகத்தில் ஸ்டாலின் மிகத்தெளிவாக இருந்தார். ராகுலுடன் ஸ்டாலின் நட்பாக நெருக்கமாக இருந்தார். ஆனால், ராகுல் காந்தி இந்த முறை காட்டிய 'ஹார்டு பார்கெய்னிங்' (Hard Bargaining) தான் உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டிருக்கிறது. "இது மாநிலத் தேர்தல், இங்கே ஆதிக்கம் செலுத்த வேண்டியது நாங்கள்தான். ஆனால், ராகுல் ஏதோ டெல்லி தேர்தல் போல சீட் கேட்டு அடம் பிடித்தது எந்த ஊர் நியாயம்?" என சித்தரஞ்சன் சாலை ஏரியாவில் டீ குடித்தபடி புலம்புகிறார்கள் சீனியர் திமுக நிர்வாகிகள்.
2. "அவருக்காக நின்ற தலைவரை இப்படியா அலைக்கழிப்பது?"
2019-ல் யாரும் முன்வராத போது, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என துணிச்சலாக அறிவித்தவர் ஸ்டாலின். 2024-லும் அதே நிலைப்பாடு. இப்படி ராகுலின் அரசியல் பயணத்தில் நிழலாக நின்ற ஒரு தலைவரை, சீட் பங்கீட்டுக்காக கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்தது 'முதுகில் குத்தும் செயல்' என்று கொதிக்கிறார்கள் திமுக தொண்டர்கள். "நாங்கள் அவருக்கு முட்டுக்கொடுத்தோம், அவர் எங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்" என்பதுதான் இப்போதைய கோஷமாக இருக்கிறது.
3. 'விஜய்' என்ற துருப்புச் சீட்டு... அதிர்ந்த கூட்டணி!
திமுகவை அதிர வைத்த மிகப்பெரிய விஷயம், ராகுல் தரப்பு தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கைகோர்க்கத் தயங்கவில்லை என்ற தகவல் கசிந்ததுதான். பல மாநிலங்களில் கூட்டணியை சிதறடித்தது போலவே, தமிழகத்திலும் ராகுல் ஒரு 'ரிஸ்க்' எடுக்கப் பார்த்ததுதான் உடன்பிறப்புகளின் கோபத்திற்கு முக்கியக் காரணம். "பழைய நண்பனை விட்டுவிட்டு, புதிய வரவை நாடியது ராகுலின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது" என அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
முக்கியமாக திமுக ஆதரவு நிர்வாகிகள் பலரும், 2024 மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்து இதுவரை கல்வி நிதி, மெட்ரோ ரயில் அனுமதி மறுப்பு, ஓசூர் விமான நிலையம், ஆளுநரின் அடாவடி என்று தமிழ்நாடு தொடர்பான எந்த பிரச்சனைக்கும் ராகுல் காந்தி குரல் எழுப்பவில்லை. அவர் குரல் எழுப்பிய ஒரே பிரச்சனை ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை என்றும் ராகுல் மீது விமர்சனங்களை வைக்கிறார்கள்.
2024 மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்து இதுவரை கல்வி நிதி, மெட்ரோ ரயில் அனுமதி மறுப்பு, ஓசூர் விமான நிலையம், ஆளுநரின் அடாவடி என்று தமிழ்நாடு தொடர்பான எந்த பிரச்சனைக்கும் ராகுல் காந்தி குரல் எழுப்பவில்லை. அவர் குரல் எழுப்பிய ஒரே பிரச்சனை ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை. pic.twitter.com/IVQRC9smPv
— பூதம் (@angry_birdu) March 5, 2026
காப்பாற்றிய கைகள்!
இந்த இழுபறி ஒரு கட்டத்தில் முறியும் நிலைக்குச் சென்றபோது, சோனியா காந்தி, ப. சிதம்பரம் . மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தமிழக காங்கிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரின் தலையீடுதான் சேதாரத்தைத் தடுத்திருக்கிறது. இவர்கள் மட்டும் இல்லை என்றால், தமிழகத்தில் 'கை' சின்னம் தனித்து விடப்பட்டிருக்கும் அல்லது வேறு திசைக்கு மாறியிருக்கும் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்:
"ராகுல் காந்தி மற்ற மாநிலங்களில் செய்த அதே தவற்றை இங்கும் செய்யத் துணிந்துவிட்டார். தேர்தல் நேரத்தில் உற்சாகமாக வேலை செய்ய வேண்டிய நேரத்தில், டெல்லியின் பிடிவாதத்தால் இப்போது ஒருவிதமான மனக்கசப்போடுதான் களமிறங்குகிறோம்" என்கிறார்கள் திமுகவினர்.
கூட்டணி கையெழுத்தாகிவிட்டது, ஆனால் ராகுல் மீதான அந்த 'கோபக் கனல்' இன்னும் ஆறவில்லை. இது களத்தில் எதிரொலிக்குமா அல்லது காலப்போக்கில் கரையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications