தேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி
சென்னை: மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி, பூரண சுந்தரிக்கு, ஐஏஎஸ் பணி வழங்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (24-10-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

குடிமைப் பணித் தேர்வில், தனது அயராத முயற்சியால் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரி அவர்களுக்கு ஓ.பி.சி பிரிவின் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளிக்குரிய பணியிடத்தின் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ். பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது. இதுகுறித்து அவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரள மாநில கேடரில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளி பெண்மணிக்கு ஐ.ஏ.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் பூரணசுந்தரி அவர்களுக்கும் ஐ.ஏ.ஸ். பணி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறேன். பூரணசுந்தரி அவர்களின் முயற்சிகளுக்கு தி.மு.கழகம் துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் பூரணசுந்தரி. பார்வை மாற்றுத்திறனாளியாகும். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்றுள்ளார். பூரணசுந்தரி கடந்த 2019ஆம் ஆண்டு நான்காவது முறையாக தேர்வெழுதி வெற்றி பெற்றார். பூரணசுந்தரிக்கு இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூர்ணசுந்தரி மனுத் தாக்கல் செய்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications