மு.க.ஸ்டாலின் "செஞ்சுரி".. டிவீட் போடு.. கொண்டாடு.. திமுக உற்சாகம்!
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிவிட்டது.
Recommended Video

சென்னை: நாட்கள் பறப்பதே தெரியவில்லை.. மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று அதுக்குள்ள 100 நாள் ஆகிவிட்டது. இதை திமுக ட்வீட் போட்டு கொண்டாடி வருகிறது.
ஒருமுறை கருணாநிதி, தனது சமுதாயப் பணிகளை ஸ்டாலின் தொடர்வார் என்று சொல்லி இருந்தார். உடனே இதை பற்றி செய்தியாளர்கள் கருணாநிதிடம் கருத்து கேட்டார்கள்.
அதற்கு கருணாநிதி, "ஏன் ஸ்டாலின் வரக்கூடாதா? அவர் திமுக இல்லையா? வரக்கூடாது என்று இப்போதிருந்தே அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவருக்கு வேண்டுமானால் கடுப்பு ஏற்படும். ஆனால் திமுக ஒரு ஜனநாயக இயக்கம்" என்றார். எப்போது கருணாநிதி இப்படி அன்பழகனை பக்கத்தில் வைத்து கொண்டு சொன்னாரோ அப்போதே ஓரளவுக்கு முடிவாகிவிட்டது ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று!!

காவி வர்ண அரசியல்
கருணாநிதி மகன் என்பதையும் தாண்டி கட்சியின் அடிமட்ட தொண்டனாக இணைந்து, படிப்படியாக உச்சத்தை தொட்டார் ஸ்டாலின். தலைவராக பதவி ஏற்கும்போது அவர் பேசிய பேச்சு பல திமுக தொண்டர்களுக்கு உத்வேகம் பாய்ச்சியது. பாஜகவின் காவி வர்ண அரசியலுக்கு பகிரங்க எதிர்ப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. ஸ்டாலினின் இந்த பேச்சை நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களுமே திரும்பி பார்த்தார்கள்.

சிலை திறப்பு விழா
எப்படியோ... இதெல்லாம் நடந்து 100 நாள் ஆகிவிட்டது. இந்த 100 நாளில் ஸ்டாலின் நிர்வாகிகள் சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு, அறிக்கை போர், ட்விட்டர் கண்டனங்கள், உள்கட்சி விவகாரம், கூட்டணி பூசல், என்று கடைசியில் கருணாநிதி சிலை திறப்பு விழா வரை நகர்த்தி கொண்டு வந்து விட்டுவிட்டார்.

கொளத்தூர்
இனியும் டெல்லிக்கு பறந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து மாபெரும் அரசியல் மாற்றத்திற்கான ஆலோசனையிலும் ஈடுபட போகிறார். இவ்வளவு நடந்தும் தன் தொகுதியான கொளத்தூரை எட்டிப் பார்க்க ஸ்டாலின் தவறவில்லை... மறக்கவும் இல்லை...
|
ட்வீட் போடு.. கொண்டாடு
திமுக தலைவராக ஸ்டாலினின் இந்த 100 நாட்களை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். தலைவராக நீடித்து இன்னும் பல மாற்றங்களை தமிழகத்தில் ஸ்டாலின் உருவாக்குவார் என்றாலும், இந்த 100 நாள் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளதாக தொண்டர்கள் பூரித்து போய் சொல்கிறார்கள். இதனை இணையத்தில் ட்விட்களை போட்டு கொண்டாடியும் வருகிறார்கள்!!
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications