தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கும் பாதிப்புகள் தொடர்பாக திமுக எம்பிக்களுடன் கட்சியின் தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து விடுவோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications