சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள்
சென்னை: சென்னை - சென்ட்ரல் தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த பயணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். பொதுமக்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பணி மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை - சென்ட்ரல் தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்தார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலையும் திமுக அரசே கொண்டு வந்துள்ளது. சென்னை மக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரயிலை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரதான பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், அதை குறைக்கும் விதமாக மெட்ரோ திட்டம் கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது. பொதுமக்களோடு பொதுமக்களாக முதல்வர் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பயணிகள் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications