உதயநிதி ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா?.. மக்களை கைகாட்டி ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை மக்கள்தான் தீர்மானிப்பார்கள், நான் அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் நிறைந்த 97 பக்க பட்டியலை திமுக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்தோம். ஆதாரங்களுடன் நாங்கள் கொடுத்த புகார் மனுவை உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். ஊழலுக்காகவே வரும் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கும்.

திமுக எதிர்க்கும்
தேர்தலுக்கு பிறகும் வலதுசாரிகளை திமுக எதிர்க்கும். சமூக நீதிக்காக திமுக எப்போதும் துணை நிற்கும். மத ரீதியிலான பிரிவினை, சம உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் திமுக அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அது போன்ற சக்திகளுக்கு நம் மாநிலத்தில் இடம் இல்லை. வாரிசு அரசியல் குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை.

அதிமுக எம்பி
லோக்சபாவில் ஒரே ஒரு அதிமுக எம்பி இருக்கிறாரே அவர் யாரு.. துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன்தானே. அவரது இன்னொரு மகன் ஜெயபிரதீப் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். பிசிசிஐயில் இருக்கிறார் அமித்ஷா மகன். இது போன் வாரிசு அரசியலுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. திமுகவில் கருத்தியல் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நபர்களின் கடின உழைப்பை மதிக்கும்.

உதயநிதி
இன்று திமுத தலைவராக நான் இருக்கிறேன் என்றால் அதற்கு நான் 50 ஆண்டுகளாக அடிமட்ட அளவிலிருந்து பணியாற்றியுள்ளேன். உதயநிதியும் அது போல் பணியாற்ற வேண்டும். அவரது செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அவரது பயணம் முன்னோக்கி செல்லுமா என்பதை முடிவு செய்யும். உதயநிதியின் அரசியல் பயணத்தை மக்கள் தீர்மானிப்பார்கள், நான் அல்ல.

கூட்டணி கட்சி
திமுகவும் கூட்டணி கட்சிகளும் அரசியல் ரீதியாகவும் தத்துவ ரீதியிலாகவும் தமிழக மக்களுக்கு எதிரான அதிமுக பாஜக கூட்டணியை எதிர்க்க ஒன்றிணைந்துள்ளோம். இந்த ஒற்றுமை எங்கள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறச் செய்யும். எங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஒரு வேளை அவர்கள் தங்களது சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதை நாங்கள் மதிப்போம். எங்களுடையது மெகா கூட்டணி, சிறிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க வரலாம் என்றார்.
-
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications