ஸ்டாலின் நாளை முதல்வராக தேர்வு செய்யப்படுவார்.. தனி மெஜாரிட்டியில் ஆட்சி! அடித்து சொன்ன டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஸ்டாலின் மீண்டும் நாளை முதல் அமைச்சர் ஆவார். திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம், வீடு என அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். எனவே, நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை முதல் தொடங்குகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனும். ஸ்டாலின் நாளை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரை தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. தவெகவினரிடம் சில ரீல்ஸ்கள் உள்ளன. அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதை மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்கள். ஸ்டாலின் மீண்டும் நாளை முதல் அமைச்சர் ஆவார். திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
நாங்கள் சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளோம். எங்களுக்கு எதிராக யாருமே எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எங்களின் திட்டம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்ந்துள்ளது. தேவைப்படும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்துள்ளோம். கல்வி, சுகாதாரம், வீடு என அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். எனவே, நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications