உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்
சென்னை: உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை என தந்தையர் தினத்தில் கருணாநிதியை நினைத்து ஸ்டாலின் உருக்கமான பதிவை பதிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் நினைவலைகளை அசைப்போட்டு ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.

உருக்கம்
உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்! #HappyFathersDay #MissUappa என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

கற்றுக் கொடுக்க
கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நல பாதிப்புகளால் மரணமடைந்தார். ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருந்தவர் கருணாநிதி. இவர் அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றே அவசியம் இல்லை.

அரசியல் கற்றுக் கொண்ட ஸ்டாலின்
இவருடன் இருந்தாலே போதும் அரசியல் நுணுக்கங்களையும் சாணக்கியத்தனத்தையும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். அப்படி உடனிருந்தே அரசியல் கற்றுக் கொண்டவர் ஸ்டாலின்.

கண்கலங்கிய ஸ்டாலின்
அப்படி தந்தையாக, குருவாக, ஆசானாக, தலைவராக இருந்த கருணாநிதி மறைவை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்ட போது கருணாநிதியை நினைத்து கண்கலங்கினார் ஸ்டாலின்.
|
ட்விட்டரில் உருக்கம்
அது போல் எண்ணற்ற தருணங்களில் கருணாநிதியை நினைத்து கண் கலங்கிய ஸ்டாலின், கடைசியாக மக்களவை தேர்தலில் திமுக 37 இடங்களில் பெற்ற வெற்றியை காண கருணாநிதி இல்லை என்று கூறி கண் கலங்கினார். அதோடு தற்போது தந்தையர் தினத்தில் அவரை நினைத்து ஸ்டாலின் ட்விட்டரில் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications