குன்னம் ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு? அதிமுக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குன்னம் எம்எல்ஏ பங்கேற்கவில்லை
Recommended Video
சென்னை: தமிழக அரசியல் களமே தகித்து காணப்படும் நிலையில், மிக முக்கியமான எம்எல்ஏவான குன்னம் ராமச்சந்திரன் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா சொன்னதுமே, அதற்கு உடனடியாக ஆதரவை தந்தது பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன்தான்.

இது சம்பந்தமாக ஒரு வீடியோகூட வெளியிட்டார். அதில், "ராஜன் செல்லப்பா சொன்னதுபோல ஒற்றைத்தலைமையும், வலிமையான தலைமையும், சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும். கழகத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழவேண்டுமே தவிர, தன் குடும்பத்துக்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களைப்போன்ற தொண்டர்களுக்கு வேதனையாக உள்ளது" என்று பகிரங்கமாகவே சொல்லி இருந்தார்.
இப்படியெல்லாம் இவர்கள் பேசியதால்தான், இன்றைக்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதாகி உள்ளது. யார் அந்த ஒற்றை தலைமை என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வளவும் பேசிய குன்னம் ராமச்சந்திரன், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால், இதற்கு அதிர்ச்சிகரமான காரணமோ, பின்னணியோ எதுவுமே இல்லை. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். அதனால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்றைய கூட்டம் நடந்து முடியும் நிலையில், எப்படியும் ராமச்சந்திரன் தனது கருத்தை எடுத்துரைப்பார் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications