பயமின்றி பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள்! +2 மாணவர்களுக்கு ஜவாஹிருல்லா தரும் நம்பிக்கை!
ஓராண்டு உழைப்பின் அறுவடை தான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு என ஜவாஹிருல்லா வாழ்த்து.
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பயமின்றி பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா விடுத்துள்ள வாழ்த்து பதிவு வருமாறு;
''பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்.
பயமின்றியும் பதட்டம் இல்லாமலும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்
எதிர்காலம் உங்களுக்கானது தான். உங்களது ஓராண்டு உழைப்பின் அறுவடை தான் இந்த தேர்வு. எனவே தேர்வு எழுதும் அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட பிரார்த்தனையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications