பயமின்றி பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள்! +2 மாணவர்களுக்கு ஜவாஹிருல்லா தரும் நம்பிக்கை!
ஓராண்டு உழைப்பின் அறுவடை தான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு என ஜவாஹிருல்லா வாழ்த்து.
சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பயமின்றி பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா விடுத்துள்ள வாழ்த்து பதிவு வருமாறு;
''பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்.
பயமின்றியும் பதட்டம் இல்லாமலும் தேர்வை எதிர்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்
எதிர்காலம் உங்களுக்கானது தான். உங்களது ஓராண்டு உழைப்பின் அறுவடை தான் இந்த தேர்வு. எனவே தேர்வு எழுதும் அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட பிரார்த்தனையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications