நல்ல ஐடியா.. சென்னை கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம் அறிமுகம்: ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை: கட்டுப்பாட்டு பகுதிகளில் (கண்டெய்ன்மென்ட் மண்டலம்) நடமாடும் ஏடிஎம் மையங்கள் செயல்படும் என்று, சென்னை கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video
ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் ஏடிஎம் வசதி செய்யப்படும், சிகிச்சை பெறுபவர்களை பார்க்க யாரும் செல்ல வேண்டாம், அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசின் அறிவுரைப்படிதான் வீடுகளுக்கு அனுப்பி கண்காணிக்க படுகிறார்கள். எந்த ஒரு வேலையும் இன்றி மக்கள் வெளியே வரவேண்டாம். வேலை இருக்கிறது என்று வெளியே வந்தாலும் அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு பிறகு வாழ்க்கை நடைமுறையில் அதிக மாற்றங்கள் தேவைப்படுகிறது. கோயம்பேடுக்கு சென்றால் மட்டும்தான் பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். கடைகளுக்கு செல்லும் போதும், பிறகு திரும்பும் போதும், கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது அவசியமாகும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்குவது மிக அவசியம். இது போன்ற வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி கொண்டால் எந்த பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications